பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)78. திருவேதிகுடி979

3641. உன்னியிரு போதுமடி பேணுமடி
       யார்தமிட ரொல்கவருளித்
துன்னியொரு நால்வருட னானிழ
     லிருந்ததுணை வன்றனிடமாம்
கன்னியரொ டாடவர்கண் மாமணம்
     விரும்பியரு மங்கலமிக
மின்னியலு நுண்ணிடைநன் மங்கைய
     ரியற்றுபதி வேதிகுடியே.               7


மடமங்கையொடு - இளமை பொருந்திய உமாதேவியாரோடு. அகம் திரியும்
- வீடுவீடாகத் திரிகின்ற, அண்ணல் - தலைவனது (இடமாம்). வையம் -
பூமி. விலை மாறிடினும் - பஞ்சத்தினால் பண்டங்களின் விலை மாறினாலும்.
ஏறுபுகழ் - முன்பே மிகுந்த கீர்த்தி. மிக்கு - மேலும் மிகுந்து. இழிவிலாத -
குறையாத. வகையார் - பண்பாடு உடையவர்களும். தண்புலவருக்கு - இனிய
புலவர்களுக்குக் (கொடை தரும்போது). வெய்ய மொழி - வன்சொற்களை.
உரைசெய்யாத - சொல்லாத. அவர் - அத்தகையார்களுமாகிய மாந்தர்
(வாழும்). வேதிகுடி - திருவேதிகுடியாம்.

     7. பொ-ரை: காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் தியானித்துத்
தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி
அருள்செய்பவன் சிவபெருமான். தன்னையடைந்த சனகர், சனந்தனர்,
சனாதனர், சனற் குமாரர் என்ற நான்கு முனிவர்கட்கும் கல்லால மரத்தின்
கீழ் தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு அறம் உரைத்தவன்.
அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாய் விளங்குபவன். அவன் உறைவிடம்
கன்னியர்களும், ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து
கொள்ளும் மங்கலநாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச்
சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய மகளிர்கள்
வாழும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: இருபோதும் - பகல் இரவு என்ற இருவேளைகளிலும். உன்னி
- தியானித்து. அடிபேணும் - தமது திருவடியைப் போற்றும். அடியார் தம்
இடர் - அடியார்களுடைய துன்பங்கள். ஒல்க - ஒழிய. அருளிய - அருள்
செய்து. துன்னிய - அடைந்த. ஒரு நால்வருடன் - சனகர் முதலிய
நால்வரோடு. ஆல் நிழல் இருந்த - கல்லாலின் நிழலில் இருந்து உபதேசித்த.
துணைவன்தன் - அனைத்துலகத்திற்கும்