|
சிந்தைசெய
வல்லவர்க ணல்லவர்க
ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது
வேசரத மாணைநமதே. 11 |
திருச்சிற்றம்பலம்
சம்பந்தன் பொருட்செறிவுடைய
செந்தமிழில் அருளிய இப்பாமாலை
கொண்டு திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான சிவபெருமானின்
திருவடிகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வர்.
மறுமையில் தேவலோகத்தை அடைந்து அரசாள்வர். இது நமது ஆணை.
கு-ரை:
கந்தம் மலி - வாசனைமிகுந்த. தண்பொழில் - குளிர்ச்சி
பொருந்திய சோலைகளும். நல் மாடம் - அழகிய மாடங்களும். மிடை -
நெருங்கிய (காழி,) மலி - பொருட்செறிவையுடைய (செந்தமிழ்.) ஆதி -
முதல்வன். சரதம் - நிச்சயம்.
திருஞானசம்பந்தர்
புராணம்
வேத வேதியர்
வேதி குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலந்திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்தெழுந்
தோதி னார்தமிழ் வேதத்தின் ஓங்கிசை.
-
சேக்கிழார்.
|
|