பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)78. திருவேதிகுடி983

சிந்தைசெய வல்லவர்க ணல்லவர்க
     ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது
     வேசரத மாணைநமதே.                11

 திருச்சிற்றம்பலம்


சம்பந்தன் பொருட்செறிவுடைய செந்தமிழில் அருளிய இப்பாமாலை
கொண்டு திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான சிவபெருமானின்
திருவடிகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வர்.
மறுமையில் தேவலோகத்தை அடைந்து அரசாள்வர். இது நமது ஆணை.

     கு-ரை: கந்தம் மலி - வாசனைமிகுந்த. தண்பொழில் - குளிர்ச்சி
பொருந்திய சோலைகளும். நல் மாடம் - அழகிய மாடங்களும். மிடை -
நெருங்கிய (காழி,) மலி - பொருட்செறிவையுடைய (செந்தமிழ்.) ஆதி -
முதல்வன். சரதம் - நிச்சயம்.

திருஞானசம்பந்தர் புராணம்

வேத வேதியர் வேதி குடியினில்
     நாதர் கோயில் அணைந்து நலந்திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்தெழுந்
     தோதி னார்தமிழ் வேதத்தின் ஓங்கிசை.

                          
- சேக்கிழார்.