3663. |
மந்திரநன்
மாமறையி னோடுவளர் |
|
வேள்விமிசை
மிக்கபுகைபோய்
அந்தரவி சும்பணவி யற்புத
மெனப்படரு மாழியிருள்வாய்
மந்தரநன் மாளிகை நிலாவுமணி
நீடுகதிர் விட்டவொளிபோய்
வெந்தழல் விளக்கென விரும்பினார்
திருந்துபதி வீழிநகரே 7 |
கு
- ரை: வைதிகமும் - வேதநெறி யொழுக்கத்திற்குரிய
அறங்களையும். மாதவம் - சிறந்த தவநெறி யொழுக்கத்திற்குரிய
அறங்களையும், மற்றும் உலகியல் நெறிபற்றி யொழுகற்பால
பல்வகையறங்களையும் படைத்தருளிய சிவபெருமானது இடமாவது என்பது
முதலிரண்டடியின் கருத்து. நாடி வருகின்ற புலவர்கள் நாள்தோறும் வளர்க்க
வளர்ந்து வரும் புகழையுடையதும், வான் அளாவிய மாளிகைகள் செறிந்து
செல்வம் வளர்வதும், ஓங்கிய மதிலையுடையதுமாகிய திருவீழிமிழலையென்பது
பின்னிரண்டடியின் கருத்து.
7.
பொ-ரை: வேத மந்திரங்கள் ஓதி வளர்க்கப்படும் வேள்வியின்
புகையானது மேலே சென்று ஆகாயத்தில் கலந்து அற்புதம் போன்று
பகற்காலத்தே இருள் சூழக் கடலைக் கடைந்த மந்திரமலையைப்போன்ற
அழகிய மாளிகைகளில் பதிக்கப்பட்ட இரத்தினங்களின் ஒளியானது
நெடுந்தூரம் பாய்ந்து புகையால் விளைந்த இருளைப் போக்கி ஒளிரும்.
அவ்வொளி வெவ்விய தழலில் ஏற்றிய விளக்கொளிபோல் விளங்கும்
இயல்பினதாய் விருப்பமுடையவர்களாய், மனநிறைவோடு மக்கள் வாழ்கின்ற
தலம் திருவீழிமிழலையாகும்.
கு-ரை:
மந்திரம்நல் மாமறையினோடு - நல்ல சிறந்த வேதத்தின்
மந்திரங்களுடன். வளர் - வளர்ந்த. வேள்வி மிசை - யாகத்தில். மிக்க
புகை போய் - மிக்கு எழும்பிய புகைசென்று. அந்தரம் - மேலே. விசும்பு
அணவி - ஆகாயத்திற் கலந்து. அற்புதம் என - பகற்காலத்தே இருள்
சூழ்ந்தது. அற்புதம் என்று வியக்க. படரும் - படர்ந்ததனால் உண்டாகிய.
ஆழி - ஆழ்ந்த - இருள்வாய். மந்தரம் - மந்தர மலைபோன்ற. நல் -
அழகிய. மாளிகை - மாளிகையில். நிலவும் - (பதித்து) விளங்குகின்ற. மணி
- இரத்தினங்களின். நீடு - நெடுந்தூரம்
|