பக்கம் எண் :

112
 

மண்டபமும் மாளிகையும் வாழதிகை வீரட்டர்க்

கெண்டிசையு மேத்த வெடுத்தமைத்தான் - விண்டவர்கள்

நாள்வாங்கச் சேயிழையார் நாண்வாங்க நற்றடக்கை

வாள்வாங்குங் காலிங்கர்மன

4


மன்னொளிசேர் நூற்றுக்கால் மண்டபத்தை மால்வரையால்

மன்னதிகை நாயகர்க்கு வந்தமைத்தான் - மன்ன

ரிசைகொடா தோட விகல்கொண்டாங் கெட்டுத்

திசைகொடாக் கூத்தன் தெரிந்து.

5


மன்னுதிரு வீரட்டர் கோயில் மடைப்பள்ளி

தன்னைத் 1தடஞ்சிலையா லேசமைத்தான் - தென்னர்

குடமலைநா டேறிவந்து கொண்டவேற் கூத்தன்

கடமலைமால்2 யானையான கண்டு.

6


அதிகை யரனுக் கருவரையாற் செய்தான்

மதுகை3நெடுங்குடைக்கீழ் மன்னர் - பதிக

ளுரியதிருச் சுற்று முடன்கவர்ந்த கூத்தன்

பெரியதிருச் சுற்றைப் பெயர்த்து.

7


அருமறைமா தாவி னறக்காமக் கோட்டம்

திருவதிகைக் கேயமையச் செய்து - பெருவிபவங்

கண்டா னெதிர்ந்தா ரவியத்தன் கைவேலைக்

கொண்டானந் தொண்டையார் கோ.

8


தென்னதிகை வீரட்டஞ் செம்பொனால் வேய்ந்திமையோர்

பொன்னுலகை மீளப் புதுக்கினான் - மன்னுணங்கு

முற்றத்தான் முற்றுநீர் வையம் பொதுக்கடிந்த

கொற்றத்தான் தொண்டையார் கோ.

9


வானத் தருவின் வளஞ்சிறந்த நந்தவனம்

ஞானத் தொளியதிகை நாயகர்க்குத் - தானமைத்தான்

மாறுபடுத் தாருடலம் வன்பேய் பகிர்ந்துண்ண

கூறுபடுத் தான்கலிங்கர் கோ.

10


1. தடஞ்சிலையால் - பெரிய கற்களால்

2. கடமலைமால் யானையான் -மதம் சொரியும் மலை போன்ற யானைப் படையினன்

3. மதுகை - வலிமை