பக்கம் எண் :

260
 

48. திருவலம்புரம்

இது மேலப்பெரும்பள்ளம் எனவும் வழங்கப்பெற்று வருகின்றது. இறைவனது திருமுடியில் பள்ளம் இருப்பதால் இப்பெயர் பெற்றது என்பர்.

இது பூம்புகார்ப் பல்லவனீச்சரத்திற்குத் தென்மேற்கே 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை சீகாழி ஆகிய ஊர்களிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகளில் ஏறி இவ்வூரைக் குறிக்கும் கைகாட்டியில் இறங்கிச் சிறிது தூரம் நடந்து சென்றால் ஆலயத்தை அடையலாம்.

இறைவரின் திருப்பெயர் - வலம்புரிநாதர். இறைவியின் திருப்பெயர் - வடுவகிர்க்கண்ணியம்மை. திருமால் வழிபட்டுச் சங்குபெற்ற தலம். இதற்குச்சம்பந்தர் பதிகம் ஒன்றும், அப்பர் பதிகம் இரண்டும் சுந்தரர் பதிகம் ஒன்றும் ஆக நான்கு பதிகங்கள் இருக்கின்றன.

கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் விக்கிரம சோழன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாங் குலோத்துங்கன் இவர்களின் காலங்களில் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள்இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில், இறைவரின் திருப்பெயர் திருவலம்புரி உடையார் என்றும், இறைவியாரின் திருப்பெயர் தடங்கண்நாச்சியார் என்றும் குறிக்கப்பெற்றுள்ளன. இவ்வூர் விக்கிரமசோழன் கல்வெட்டில் இராசராச வளநாட்டு ஆக்கூர்நாட்டு தலைச்சங்காட்டுத் திருவலம்புரம் என்றும் மூன்றாங் குலோத்துங்கன் கல்வெட்டில் சயங்கொண்ட சோழவளநாட்டு, ஆக்கூர்நாட்டு, தலைச்சங்காட்டுத் திருவலம்புரம் என்றும் கூறப்பெற்றுள்ளது. இக்கோயிலின் கூத்தாடுந்தேவர், அவரது நாச்சியார், பள்ளியறைப் பிராட்டியார், இவர்களை எழுந்தருளுவித்து அவர்களுடைய நாள்வழிபாட்டிற்கு இரண்டேகால்வேலி நிலத்தை அளித்தவன் குலோத்துங்கசோழ வளநாட்டு, விளநாட்டு, ஆலங்குடியிலிருந்த வேளான் கண்டராதித்தன் ஆவன். இது நிகழ்ந்தது விக்கிரமசோழனின் ஆறாம் ஆண்டில்ஆகும்.

இவ்வூர்ச் சபையாராகிய சபையார் மும்முடிசோழன் பேரம்பலத்தில் கூட்டங்கூடி, கோயிலுக்கு வேண்டியவைகளைச்