உள்ளன. இங்குக் காழிக்கோலத்தைச் சம்பந்த மூர்த்திக்கு இறைவன் காட்டியருளினார். விழா: சித்திரைத்திங்களில் பெருவிழா நிகழும். மணக்கோலத் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. மணவாளப் பெருமான் திருவடியில் திருமால் கண்ணைப் பறித்து அர்ச்சித்த அடையாளம் இன்றும் இருக்கிறது. சுவாமி நேத்திரார்ப்பணேசர்; வீழியழகர் எனவும் வழங்கப் பெறுவர். அம்மை சுந்தரகுசாம்பிகை. தீர்த்தம்: விஷ்ணு தீர்த்தம். தலவிருட்சம்: வீழிச்செடி. கல்வெட்டு: இத்தலத்திலுள்ள கல்வெட்டுக்கள்68. வீழிமிழலை என்றே இத்தலம் வழங்கப்பெறுகின்றது. தற் குலோத்துங்கன் காலத்து உலகுய்யக்கொண்டசோழவளநாட்டு வேணாட்டுப்பிரமதேயம் திருவீழிமிழலைஎன வழங்கியது. சுவாமி பெயர் வீழிநாதர், வீரிமிழலைநாதர்என்பன. கோயில் பிராகாரத்தில் சிலரால் பிரதிட்டைசெய்யப்பெறற நின்றருளிய நாயனார், நெறிவார்குழலிநாச்சியார், திருவேட்டீஸ்வரமுடைய மகாதேவர், திருவேகம்பமுடையார்1 பார்வதீஸ்வரமுடையார்2 திருத்தண்டூன்றிய மகாதேவர்3கோயில்களும் பிரதிட்டிக்கப்பெற்ற இடங்களும்குறிக்கப்பெறுகின்றன. அம்மை, காமக்கோட்டம்உடைய நாச்சியார் என்று அழைக்கப்பெறுகிறார். திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும், மாணிக்கவாசகருக்கும் தனித்தனிஆலயங்கள் அமைந்திருந்தன. முன்னிருவருடைய மடங்களும்வடக்குவீதியில் இருந்தன என்பதும் அறியக் கிடக்கின்றன4. ஆதித்தன் மகனாகிய முதற்பராந்தகன்காலத்திலிருந்து பதி
1. 417 of 1908 2. 418 of 1908 3. 436 of 1908 4. 392 of 1928.
|