பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்239

பெருமான் அழகிய மணவாளப்பெருமான் என்று குறிக்கப்பெறுகின்றார். இந்த மூர்த்தியையும், இராஜேந்திர சோழ அணுக்கப் பல்லவரையர் புதுக்கிப் பிரதிட்டை செய்ததாகத் தெரிகிறது.
    திருவாவடுதுறை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.

74. திருவெண்காடு

     ஆக்கூரிலிருந்து சீகாழி செல்லும் பெருவழியில் பேருந்து மூலம் அல்லிவிளாகத்தில் இறங்கிக் கிழக்கே 4.5.கி.மீ. தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை, சீகாழி, பூம்புகார் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
 இது காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.
     இறைவர் திருப்பெயர் திருவெண்காட்டீசர், சுவேதாரண் யேசர். இறைவி திருப்பெயர் பிரமவித்யாநாயகி.
     தீர்த்தம் : முக்குளங்கள் - சூரிய தீர்த்தம், அக்கிநி தீர்த்தம் சந்திரதீர்த்தம்.
     இக்குளங்களில் நீராடி வழிபடுகிறவர்கள் பிள்ளைப்பேற்றை அடைவார்கள். அவர்களைத் தீவினைகள் அடையா. இச்செய்திகளை இத்தலத்துக்குரிய,
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயன தோளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே
-தி.2ப.48பா.2
என்னும் திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் (பண் - சீகாமரம், பாட்டு.2.)இனிது தெளிவு படுத்தும்.
     இதற்கு திருப்பெண்ணாகடத்தில் அச்சுதகளப்பாளர் என்பார் ஒருவர் புத்திரப்பேறின்றி இருந்தார். அவர் தமது ஆசாரியர் அருணந்தி சிவாசாரியர் அருளியபடி, திருமுறையில் கயிறுசாத்தினர். சாத்திய பொழுது ஞானசம்பந்த சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய