பக்கம் எண் :

1196திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3911. நல்லிய னான்மறை யோர்புகலித்
       தமிழ்ஞான சம்பந்தன்
வல்லியந் தோலுடை யாடையினான்
     வலம்புர நன்னகரைச்
சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல
     வல்லவர் தொல்வினைபோய்ச்
செல்வன சேவடி சென்றணுகிச்
     சிவலோகஞ் சேர்வாரே.               11

திருச்சிற்றம்பலம்


சிறிதும் கேளாத, வழிவழியாகச் சிவனடிமை செய்யும்
தொண்டர்கள் உள்ளம் உருகி ஏத்த, அவர்களின் உயிர்க்குள்ளுயிராயிருந்து
அருள் செய்யவல்ல அழகர் சிவபெருமான் ஆவார். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் இடம், குளங்களிலிருந்து வயல்கட்குப் பாயும் நீர்
வளமுடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும்.

     கு-ரை: காவிய கல்துவர் ஆடையினார் - காவியைத் தருவதாகிய
நல்ல துவரில் தோய்த்த ஆடையையுடைய புத்தர்களும், கடுநோன்பு
மேல்கொள் பாவிகள் - இரண்டு உவாவும் அட்டமியும் பட்டினி
நோன்பையே மேலாகக்கொண்ட பாவிகளாகிய சமணர்களும் (சிந்தாமணி.
1547) சொல்லும் சொல்லைப் பயின்று அறியா - கேளாத. பழந் தொண்டர் -
வழிவழித் தொண்டர்கள். ஆவியுள் நின்று - அவர்கள் ஆன்மாவினுள்
நின்று, அருள் செய்ய வல்ல அழகர். வாவியில் - குளங்களிலும். வயல் -
வயல்களிலும் நீர் வாய்ப்பு உடைய வலம்புரம்.

     11. பொ-ரை: நல்லொழுக்கமுடைய, நான்கு வேதங்களையும் நன்கு
கற்று வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் திருத்தலத்தில்
அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன், புலியின் தோலை ஆடையாக உடுத்திய
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகரைப்
போற்றிப் பாடிய இப்பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள், தொல்
வினை நீங்கிச் சிவலோகம் சென்றணுகி முத்திச் செல்வத்தைத் தருகின்ற
சிவபெருமானின் சேவடிகளைச் சேர்ந்திருப்பர்.

     கு-ரை: நல் இயல் - நல்ல ஒழுக்கத்தையுடைய நால்மறையோர்.
வல்லியம்தோல் - புலியின் தோலை. உடை ஆடையினான் - இடுப்பில்
உடுக்க ஆடையாய்க் கொண்டருளியவன். சிவலோகம் சென்று அணுகி
முத்திச் செல்வத்தை யருள்வானாகிய சிவபெருமான் சேவடியைச்
சேர்ந்திருப்பர் என ஈற்றடிக்குப் பொருள் கொள்க.