கு-ரை: மேகலை-பெண்கள் இடையில் அணியும் அணிகலன். மேகலை கூறியது மாதொரு வறராதல் பற்றி. 10, பொ-ரை: திருப்பாலைத்துறையர், வெவ்விய கண்ணை உடைய வாளரவை ஆட்டி அச்சுறுத்துவர்; அடியார்க்கு அருள் வழங்குபவர்:செங்கண்ணை உடையமாலும் அயனும் தேடற்கு அரியவர்; பைங்கண்ணை உடைய இடபத்தை வாகனமாக உடையவர். கு-ரை: வெங்கண்-கொடிய கண், வாள் அரவு-ஒளி பொருந்திய பாம்பு ஆட்டி - ஆடச்செய்து. வெருட்டுவர்-தோற்றத்தால் அச்சம் விளைவிப்பவர். அங்கணார்-அழகிய கருணை பொருந்திய கண்களை உடையவர். 11,பொ-ரை: தன் ஆற்றலினால் இராவணன் உயர்ந்த திருக்கயிலாய மாமலையை நெருக்கலுற்றானை நெரித்து,அவன் பாடலும் கேட்டு இரக்கமாக அருள்புரிந்த திருப்பாலைத்துறையைக் கரங்களால் தொழுவார் வினை நீங்கும். கு-ரை: உரத்தினால்-வலிமையினால். உயர்மாமலை-உயர்ந்த கயிலைமாமலையினால். நெருக்கினானை-மலைமகளை அஞ்சச் செய்தவனை நெரித்து-ஊன்றி கரத்தினால் -கைகளால், |