பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ளதும், நறுமணமிக்க திருநீற்றினையணிந்த இறைவன் விளங்குவதுமாகிய திருவதிகை வீரட்டத்தை உரையேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: வரையார்ந்த-மலையிடத்தே பொருந்திய. திரள்-குவியல் மாணிக்கத்திரள் எனவும் கூட்டுக. உரையேனாகில்-புகழ்ந்து பாடேனாயின். 12, பொ-ரை: இறந்தவர்களது(வாழ்நாள் உலந்தார்) வெள்ளிய தலைகளை உண்கலனாகக்கொண்டு, வெற்றிமிக்க அவ்வாளரக்கனாகிய இராவணனைச் சிலம்பணிந்த திருவடி விரலால் ஊன்றிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைப் புலம்பிப்பாடேனாயின் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: உலந்தார்-இறந்தவர.் உண்கலன் -உண்ணும் பாத்திரம.் வலம்-வெற்றி. புலம்பேனாகில்-மனங்கரைந்து பலகாலும் சொல்லிப் புகழேனாயின். | திருநாவுக்கரசர் புராணம் அரி அயனுக் கரியானை அடியவருக் கெளியானை விரிபுனல்சூழ் திருவதிகை வீரட்டா னத்தமுதைத் தெரிவரிய பெருந்தன்மைத் திருநாவுக்கரசுமனம் பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப் பலபாடிப் பணிசெயுநாள். -தி,12.சேக்கிழார். | | |