பக்கம் எண் :

76தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(ஐந்தாம் திருமுறை)

சகம் 1235-ல் சேர அரசனான இரவிவர்ம வீரராஜ குலசேகரதேவனால் கோயில் முழுவதும் தூய்மைப்படுத்தப்பெற்ற செய்தி தெரிகிறது 1. வாகீசமடம் என்ற பெயருடன் ஒன்று இத்தலத்தில் இருந்திருக்க வேண்டும். இதற்குக் குலோத்துங்கன் I தன் ஆட்சிக் காலத்தில் நிலம் அளித்துள்ளான்2.

3. திருஅரிசிற்கரைப்புத்துர்

இத்தலம் சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். கும்பகோணம் - நாச்சியார் கோயில் பேருந்தில் சென்றால் இவ்வூரை அடையலாம்.
    இத்தலம் அழகாபுத்தூர் என வழங்குகிறது. சுவாமி: படிக்காசு வைத்தபரமர். தேவி: சிவாம்பிகை, சௌந்தர அழகம்மை.
    இந்தவூர் அழகார் புத்தூர் திருப்புத்தூர் என்றும் வழங்குகின்றது. அரிசில் நதி ஓடுகிறது. கோச் செங்கட்சோழன் திருப்பணி.
    சொர்ணபுரீவர சுவாமி மேற்குப் பார்த்த சந்நிதத் தெரு, அழகானது. தென்னை மரங்களின் வரிசைகொண்டது.
கல்வெட்டு:
ஏழு கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. அவை எல்லாம் சோழர் காலத்தவை.
    1. இராஜராஜன் 7-ஆம் ஆண்டில் திருப்புத்தூர் உடையார் பரமசுவாமிக்கு 1300 குழி நிலம் வழிபாட்டிற்காக விட்டான். அப்போது மூலகிருகம் கல்லால் படைக்கப்பெற்றது. ஊர்ப்பெயர் திருநாரையூர் நாட்டுப் பரமதேயமான பரதாயகுடி என்று கண்டிருக்கிறது.
    2. அதே அரசனால் தனது 22ஆம் ஆண்டில் ஒரு விளக்குக்காக 3மா. நிலம் கொடுக்கப்பட்டது.
    3. அதே அரசனால் தனது 28ஆம் ஆண்டில் விளக்குத் தானம் செய்யப்பட்டது.

1 34 of 1903, 2 49 of 1903.