"ஒழுக்க என்கணுக்கொரு மருந் துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறைவானே" (தி. 7 ப. 54 பா. 1) "மூன்று கண்ணுடையாய் அடியேன்கண் கொள்வதே கணக்கு வழக்காகில்" (தி. 7 ப. 54 பா. 4) "கழித்த லைப்பட்ட நாயது போல ஒருவன் கோல் பற்றிக் கறகற இழுக்கை ஒழித்துநீ அருளாயின செய்யாய்" (தி. 7 ப. 54 பா. 5) "அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால் அழையேல் போகுருடா எனத் தரியேன் முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்" (தி. 7 ப. 54 பா. 9) "தண்பொழி லொற்றி மாநகருடையாய் சங்கிலிக்கா வென்கண் கொண்ட பண்பநின் னடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே" (தி. 7 ப. 69 பா. 3) "கண்மணியை மறைப்பித்தாய்" (தி. 7 ப. 89 பா. 6) ஊன்றுகோல் பெற்றது : சுந்தரர் திருவெண்பாக்கத்து இறைவரை வழிபட்டு ஊன்றுகோல் பெற்றதைக் குறிப்பிடும் பகுதிகள் : "ஊன்று கோலெனக் காவ தொன்றருளாய்" (தி. 7 ப. 54 பா. 4) மான்திகழும் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம் தோன்றஅருள் செய்தளித்தா யென்றுரைக்க உலகமெலாம் ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோவென்ன ஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீ ரென்றானே. (தி. 7 ப. 89 பா. 10)
|