சங்கிலியாரை மணந்தது : திருவொற்றியூர் இறைவனைப் பணிந்து வேண்டிச் சங்கிலியாரை மணந்த செய்தியைக் குறிப்பிடும் பகுதிகள். "பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீழ் இருஎன்று சொன்ன வெனைக்காணாமே சூளுறவு மகிழ்க்கீழே என்ன வல்ல பெருமானே" (தி. 7 ப. 89 பா. 9) "மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம் தோன்றவருள் செய்தளித்தாய்" (தி. 7 ப. 89 பா. 10) "நொய் யேனைப் பொருட்படுத்துச் சங்கிலியோ டெனைப் புணர்த்த தத்துவனை" (தி. 7 ப. 51 பா. 11) "பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கு மெனக்கும் பற்றாய பெருமானே" (தி. 7 ப. 46 பா. 11) ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள் சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச் சாந்தனன் சார்ந்தனன் சங்கிலிமென்றோள் தடமுலை ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூரையன் அருளதே. (தி. 7 ப. 45 பா. 4) துணையும் அளவுமில்லாதவன் றன்னருளே துணையா கணையுங் கதிர்நெடு வேலுங்கறுத்த கயலிணையும் பிணையும் நிகர்த்தகட் சங்கிலி பேரமைத் தோளிரண்டும் அணையுமவன் திருவாரூரனாகின்ற அற்புதனே. - திருத்தொண்டர் திருவந்தாதி, 40 கண்களை இழந்து வருந்துதல் : சுந்தரர் சங்கிலியாருக்குச் செய்த சபதம் பிழைத்த காரணத்தால் கண்களை இழந்து வருந்தினார். அதைக் குறிக்கும் பகுதிகள். வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால் மற்று நானறியேன் மறுமாற்றம்
|