பக்கம் எண் :

406
 

"முதுகுன்றமர்ந்தீர், மின்செய்த நுண்ணிடையாள்
பரவையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள்"

(தி. 7 ப. 25 பா. 1)

உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச்
செம்பொனைத் தந்தருளித் திகழும் முதுகுன்றமர்ந்தீர்
வம்பமருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளங் கெடவே.

(தி. 7 ப. 25 பா. 2)

"பூத்தாருங் குழலாள் பரவையிவள் தன்முகப்பே
கூத்தாதந் தருளாய்"

(தி. 7 ப. 25 பா. 9)

நம்பியாண்டார் நம்பிகளும் இதனைக் குறித்துள்ளார்.

செழுநா வயல்முது குன்றினிற்

செந்தமிழ் பாடிவெய்ய

மழுநீள் தடக்கையன் ஈந்தபொன்

ஆங்குக்கொள் ளாதுவந்தப்

பொழில்நீள் தருதிரு வாரூரில்

வாசியும் பொன்னுங்கொண்டோன்

கெழுநீள் புகழ்த்திரு வாரூரன்

என்றுநாம் கேட்டதுவே.

 (தி. 11 தி. திருவந்தாதி. 77)

பொதிசோறு பெற்றது :

திருக்குருகாவூர் இறைவன் சுந்தரருக்குப் பொதிசோறு அளித்த அற்புதத்தைச் சுந்தரர் குறிப்பிடும் பகுதி.

"ஆவியைப் போகாமே தவிர்த்துஎன்னை
ஆட்கொண்டாய்"

(தி. 7 ப. 29 பா. 2)

"பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்"

(தி. 7 ப. 2 பா. 93)