பக்கம் எண் :

திருமுறை]2. கோயில்13


திருவடி
 

13.

கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்
   கனகமா ளிகைகலந் தெங்கும்
பெருவள முத்தீ நான்மறைத் தொழிலால்
   எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியந்
   திரண்டசிற் றம்பலக் கூத்தா!
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
   உன்அடிக் கீழதென் உயிரே.                   (2)
 

திருக்கணைக்கால்
 

14.

வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம்
   கரும்பொடு மாந்திடு மேதி
பிரம்பிரி செந்நெற் கழனிச்செங் கழுநீர்ப்
   பழனஞ்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்
சிரம்புரை முடிவா னவர்அடி முறையால்
   இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா!
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
   நினைந்துநின் றொழிந்ததென் நெஞ்சே.          (3)
 

13,  கருவளர்-சூல் மிகுந்த. அகடு-வயிற்றின்கண்.  ‘மகுடம்’ என்றது,
சிகரத்தை.     கலந்து-கலக்கப்பட்டு.    பெரும்பற்றப்     புலியூராகிய
‘தெய்வப்பதி’ எனவும், ‘தெய்வப் பதிச்சிற்றம்பலம்’  எனவும்  இயையும்.
திரு-அழகு. விதி நிதியம்-முறைப்படி செய்யும்  வழிபாடாகிய  செல்வம்.
உரு-அழகு,  ‘உருவளர்  சிலம்பு’  என்க.  அன்றி,    உருவளர் அடி’
எனலுமாம்.  ‘நான்மறைத்  தொழில்சால்’ எனவும், ‘தெய்வப் பதி  வதி’
எனவும், பாடம் ஓதுப.

14. வரம்பு இரி-கரைக்குமேல் பாய்கின்ற. மிளிர்-பிறழ்கின்ற. கரும்பு,
பின்னர்க்     கூறப்படுகின்ற     செந்நெல்     வயலில்    உள்ளது.
மாந்திடும்-உண்கின்ற.   மேதி-எருமை.   பிரம்பு  இரி- பிரப்பம்புதரில்
செல்கின்ற, ‘செந்நெற் கழனியையுடைய