பக்கம் எண் :

14திருவிசைப்பா[ஒன்பதாந்


திருத்துடை
 

15.

தேர்மலி விழவிற் குழலொலி, தெருவில்
   கூத்தொலி, ஏத்தொலி, ஓத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
   பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில விலயத் திருநடத் தியல்பிற்
   றிகழ்ந்தசிற் றம்பலக் கூத்தா!
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
   மணிக்குறங் கடைந்ததென் மதியே.              (4)
 

திருவுடை
 

16.

நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்
   கிளங்கமு குளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதண
   முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்
 

பழனம்’      என்க.     பழனம்   -   மருத      நிலம்.    ‘சிரம்
புரைமுடி -தலையின்கண்     உயர்ந்த       முடியை      அணிந்த.
முறையால்-தமக்கேற்ற  வரிசையில்.  ‘மாந்து மேதிகள்  சேர்’ ‘பரம்பிரி’
‘கழனி செங்கழுநீர்’, ‘சிரம்புணர்முடி’ என்பனவும் பாடங்கள்.

15.   ‘தெருவில்’ என்பதனை முதலிற் கொள்க. ஓத்து-வேதம். ‘கடல்
ஒலிபோல’  என  உவம உருபு விரிக்க. ‘பெரும்  பற்றப் புலியூரின்கண்
திகழும்’   என்க.   ‘சீர்’   என்பது   தாள  அறுதி.  இலயம்- தாளம்.
‘‘இயல்பின்’‘  என்றதில் இன்,சாரியை. ‘இயல்பினோடு’ என  மூன்றாவது
விரிக்க. மா-சிறந்த, மணிக் குறங்கு-அழகிய துடை.

16.    ‘நிறைந்த, தழைத்த வாழை’ என்க. ‘வாழை,  தெங்கு, கமுகு,
பலா,  மா  என்பவற்றின்மேல்  பிறை  தவழ்  பொழில்’   என்றவாறு.
இவற்றோடு  இயைபில்லாத  துகிற்  கொடியை இடை வைத்தார்; பிறை
தவழப்பெறுதலாகிய ஒப்புமை பற்றி. எனவே, அதனை முதலிற்  கூட்டி,
‘நிழற்கொடியோடு  ’  என  வேறுவைத்துரைக்க.  ‘பலா’  என்பது ஈறு
குறுகிநின்றது: செய்யுளாதலின் உகரம்பெறாது வந்தது.