பக்கம் எண் :

திருமுறை]2. கோயில்15


சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த
   செம்பொற்சிற் றம்பலக் கூத்தா!
பொறையணி நிதம்பப் புலியதள் ஆடைக்
   கச்சுநூல் புகுந்ததென் புகலே.                   (5)
 

திருவுந்தி
 

17.

அதுமதி இதுஎன் றலந்தலை நூல்கற்
   றழைப்பொழிந் தருமறை யறிந்து
பிதுமதி வழிநின் றொழிவிலா வேள்விப்
   பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்
செதுமதிச் சமணும் தேரரும் சேராச்
   செல்வச்சிற் றம்பலக் கூத்தா!
மதுமதி வெள்ளத் திருவயிற் றுந்தி
   வளைப்புண்டென் உளம்மகிழ்ந் ததுவே.          (6)
 

கிடங்கினை    (ச் சூழ) உடைய இடை மதில்’ என்க. பதணம் - மதில்.
உறுப்பு.  ‘தரளம்,  நித்திலம்’  என்பன முத்தின்  வகைகள். ‘அவற்றை
உடைய    செம்பொன்னால்    இயன்ற   சிற்றம்பலம்’    என்றவாறு.
இத்திருப்பாட்டினின்றும்   சிலர்.   ‘கூத்த’  என்றே   பாடம்  ஓதுவர்.
நிதம்பம்-அறை.  பொறை  அணி-உடைக்குக் காப்பாக  அணியப்பட்ட
கச்சு   நூல்’   என்க.   ‘பொறையாக’   என   ஆக்கம்   வருவிக்க.
புகல்-விருப்பம்.

17.  மதி-ஞானம். இது, தாப்பிசையாய் நின்றது. ‘அது ஞானம்; இது
ஞானம்  என்று  பரந்து  திரிதற்கு  ஏதுவாகிய   சமய நூல்கள்’ என்க.
‘‘கற்று’’     என்றது,     ‘அழைப்பு’    என்பதனோடே     முடியும்.
அழைப்பு-கூப்பீடு;   பிதற்றொலி-பிது,   ‘பித்ரு’   என்பதன்  சிதைவு.
‘எவ்வுயிர்க்கும்  அப்பனாகிய  உனது   ஞானத்தின்  (சிவஞானத்தின்)
வழிநின்று  என்றபடி’ செது-தீமை. ‘‘செதுமொழி  சீத்த செவி’’ (கலி-68)
என   வந்தமை   காண்க.   சேராச்  சிற்றம்பலம்’    என  இயையும்.
‘மதுவெள்ளம்   போலும்   திருவயிறு’   என்க.  வயிற்றை  இவ்வாறு
உவமித்தார்.  கொப்பூழ்,  அவ்வெள்ளத்தில் தோன்றும்  சுழிபோல்வது’
என்பது  விளங்குதற்கு. ‘‘நீர் வெள்ளம்’ என்னாது,  ‘தேன்  வெள்ளம்’
என்றது,  இனிமை புலப்படுத்தற்கு, ‘‘மதி வெள்ளம்,’’  வினைத்தொகை.
வளைப்புண்டு. கவரப்பட்டு. உள்-உள்ளம்.