பக்கம் எண் :

28திருவிசைப்பா[ஒன்பதாந்


துட்டரைத் தூர்த்த வார்த்தைத்
   தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண் ; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                     (2)
 

37.

அருட்டிரட் செம்பொற் சோதி
   யம்பலத் தாடு கின்ற
இருட்டிரட் கண்டத் தெம்மான்
   இன்பருக் கன்பு செய்யா
அரட்டரை, அரட்டுப் பேசும்
   அமுக்கரைக், கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                     (3)
 

38.

துணுக்கென அயனும் மாலும்
   தொடர்வருஞ் சுடராய், இப்பால்
அணுக்கருக் கணிய செம்பொன்
   அம்பலத் தாடிக் கல்லாச்
 

வஞ்சகச்     சொல். தொழும்பர்  - பிறர்க்கு   அடிமையாய் நிற்பவர்.
பிழம்பு-இனிது விளங்காத  சொல்; முணுமுணுத்தல். பிட்டர்- நொய்யர்;
சிறியோர்.  இச்சொல்  ‘பிட்டம்’  என்பதினின்று;  பிறந்தது. ‘‘பிட்டர்
சொல்லுக் கொள்ள வேண்டா பேணித் தொழுமின்கள்’’
(திருமுறை-
1-69-10) என்று அருளிச்செய்தமை காண்க.

37.     ‘அருளினது  திரளாகிய  அம்பலம்’  எனவும், ‘இருளினது
திரள்போலும்     கண்டம்’     எனவும்       உரைக்க   எம்மான்
இன்பம்-சிவானந்தம்.    அரட்டர்-துடுக்குடையவர்   அரட்டு -துடுக்கு.
அழுக்கர்-மாசுடையவர். பிரட்டர் (பிரஷ்டர்) - நெறிதவறியவர்.

38.     ‘‘துணுக்கென’  என்பதை  ‘துணுக்கென்று’  எனத் திரிக்க.
துணிக்கெனல்-அஞ்சுதல்.   அணுக்கர்-அணுகியிருப்பவர்:    அடியவர்.
அணிய-அண்மைக்கண்  உள்ள. ‘‘செம்பொன்  அம்பலத்தாடி’’ என்றது
ஒருபெயர்த்   தன்மைத்தாய்,   ‘‘அணிய’’  என்றதற்கு   முடிபாயிற்று.
சிணுக்கர்  -  அழுகையுடையவர்.      சிவபெருமானை     இகழ்ந்து
முணுமுணுத்தலை, ‘அழுகை’ என்றார். செத்தல்-செதுக்குதல்; பிறரைத்