பக்கம் எண் :

திருமுறை]5. திருவீழிமிழலை37


தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
   நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை
   வருந்திநான் மறப்பனோ இனியே.               (7)
 

53.

ஆயிரங் கமலம்ஞாயிறா யிரமுக்
   கண்முக கரசர ணத்தோன்,
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
   படர்சடை மின்னுபொன் முடியோன்,
வேயிருந் தோளி உமைமண வாளன்
   விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
   போற்றுவார் புரந்தரா திகளே.                  (8)
 

யாறு.    அரிசிலின் கரைக்கண் உள்ளதும்,  இருமருங்கும் பொழிலால்
சூழப்பட்டதும்,  கழனிகளை யுடையதும், நீண்ட  மாளிகை சூழ்ந்ததும்,
மாடங்கள்   நீடியதுமான  உயர்திருவீழி’  என்க.  ‘மாளிகை  மாடம்’
என்பன  இல்லத்தின்  வகைகள்.  ‘தங்கு,  சீர்,  செல்வம்,  தெய்வம்,
தான்தோன்றி’    ஆகிய    அனைத்தும்,    ‘‘நம்பி’’   என்பதையே
விசேடித்தன. சோதி-ஒளி. ‘தனது ஒளியாகிய மங்கை’ என்க. ‘‘வருந்தி
மறப்பனோ’  என்றதை, ‘மறந்து வருந்துவனோ’ எனப் பின்முன்னாக்கி
யுரைக்க. ‘வருந்த’ எனப் பாடம் ஓதுதலும் ஆம்.

53.     கண் முதலியவற்றை எதிர்நிரனிறையாக்கி, கண் ஒன்றற்கும்
ஞாயிற்றை     உவமையாகவும்,     ஏனையவற்றிற்குக்    கமலத்தை
உவமையாகவும்   கொள்க.   கண்களை,  ‘‘ஆயிர  ஞாயிறு’’ என்றது
ஒளிமிகுதி    பற்றி.    கரம்-கை.    சரணம்-பாதம்.   பாய்   இருங்
கங்கை-பாய்ந்தோடுகின்ற     பெரிய     கங்கை.    பனி- குளிர்ச்சி.
கரந்த-மறைத்த.  படர்-விரிந்த.  சடையாகிய பொன்முடியோன்’  என்க.
‘‘போய்’’  என்றது, ‘அடைந்து’ என்றபடி. ‘திருவீழிமிழலைக் கோயிலை
அடைந்து   போற்றாவிடினும்,   அதனைச்   சூழ்ந்துள்ள  பொழிலை
அடைந்தேனும் போற்றுவாரது கழல்களைப் போற்றுவார்  புரந்தராதியர்
ஆவர்’ என்றார், புரந்தரன்-இந்திரன்.