பக்கம் எண் :

36சேந்தனார் திருவிசைப்பா[ஒன்பதாந்


மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீழி
   மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
அத்தெய்வ நெறியிற் சிவமலா தவமும்
   அறிவரோ அறிவுடை யோரே!                  (5)
 

51.

அக்கனா அனைய செல்வமே சிந்தித்
   தைவரோ டழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
   புனிதனை, வனிதைபா கனை, எண்
திக்கெலாங் குலவும் புகழத்திரு வீழி
   மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
   பொடியணிந் தடிமைபூண் டேனே.               (6)
 

52.

கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும்
   கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
   மாடநீ டுயர்திரு வீழித்
 

இம்மாட்டமை     உடையவாயினும்,    மாட்டுவபோலச்  சொற்சாலம்
செய்தல்  பற்றி,  ‘‘இந்திர  சால  நெறி’’ என்றார்.  ‘‘பொய்’’  என்றது
போலியை.    ‘பொய்த்    தெய்வங்களைக்கொண்ட   நெறி’   என்க.
புரிந்த-இடைவிடாது  நின்று அருள்செய்த. புராண சிந்தாமணி- பழைய
(எல்லாப் பொருட்கும்முன்னே     உள்ள)    சிந்தாமணி;  என்றது.
சிவபெருமானை. வைத்த-அமைத்த.  ‘மெய்த்  தெய்வ  நெறியையுடைய
நான்மறையோர்’ என்க. கோயிற்கண் உள்ளதும், அத்தெய்வ நெறிக்கண்
விளங்குவதும்  ஆகிய    சிவம்’    என்க.    அவம் - பயனில்லாத
பிறபொருள்கள். அறிவரோ-பொருளாக நினைப்பரோ! நினையார்.

51.     பண்டறி சுட்டாய அகரச் சுட்டு, ‘‘செல்வம்’’ என்பதனோடு
இயையும்.  கனா, நிலையாமை பற்றிவந்த உவமை. ‘சிந்தித்து’’ என்றது,
‘விரும்பி’  என்றவாறு.  ஐவர், ஐம்புலன்கள் அழுந்தி-மிகப் பொருந்தி,
அவமே-வீண்செயலிலே. பொடி-துகள். ‘அவர்க்கு அடிமை  பூண்டேன்’
என்க. ‘இனி எனக்கு என்ன குறை’ என்பது குறிப்பெச்சம்.

52. ‘கங்கையது நீர்போலும்  நீரையுடைய அரிசில்’ என்க. ‘‘கங்கை
நீர்’’ உவமையாகு பெயர். அரிசில், ஓர்