பக்கம் எண் :

42சேந்தனார் திருவிசைப்பா[ஒன்பதாந்


59.

மாதி மணங்கம ழும்பொழில்
   மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச்
   சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி யமரர் புராணனாம்
   அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி யறிகிலள், பொன்னெடுந்
   திண்டோள் புணர நினைக்குமே.                (2)
 

60.

நினைக்கும் நிரந்தர னேயென்னும்
   நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
   நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர்
மனக்கின்ப வெள்ள மலைமகள்
   மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்டுறைத்
   தருணேந்து சேகரன் என்னுமே.                 (3)
 

59.    மாதி - மாது உடையவள், தலைவி. மாது - அழகு. “மாதி”
என்றது  “அறிகிலள்”  என்பதனோடு  இயையும்.  மெய்ச்   சுருதி  -
உண்மை   நூலாகிய   வேதம்.   அதன்  விதிவழியோர்,  அந்தணர்.
புராணன் - பழையோன்; என்றது, ‘முற்பட்டவன்’ எனப் பொருள்தந்து.
அமரர்களையும்   தோற்றுவித்தோனாதல்  குறித்தது  “நீதி”  என்றது
பெருமையை;  ‘அதனை  அறியாதவளாய் அவன் திண் .தோள்களைப்
புல்ல   நினைத்தாள்:   இது   கூடுவதோ’   என்றபடி.  இக்கூற்றால்,
இவ்வாசிரியர்க்கு  இறைவன்  திருவருட்கண்  உள்ள வேட்கை மிகுதி
புலனாகும். “அறிகிலள்” என்றது முற்றெச்சம்.

60.     “நினைக்கும்”   என்றது   முற்று.   நிரந்தரன் -   நிலை
பெற்றிருப்பவன்.  நிலாக்  கோலம்  - நிலாவினால் உண்டாகிய அழகு.
நயம்  -விருப்பம்.  பேசும்  - வெளிப்படையாக எடுத்துச்  சொல்வாள்.
“நங்கைமீர்’’   என்றது   முதலியன,   தலைவி   கூற்றைச்   செவிலி
அங்ஙனமே  கொண்டு  கூறியது.  “ நங்கைமீர்” என்றதனைச் செவிலி
கூற்றெனினும்   இழுக்காது  “  மனக்கு”  என்றதில்   அத்துச்சாரியை
தொகுத்தல்.   மனக்கு   இன்பவெள்ளம்-என்    மனத்துக்கு   இன்ப
வெள்ளமாய்  இருப்பவன்.  “நம்பி  இன்பன்,   தருணேந்து  சேகரன்
என்றவை, ஒரு