பக்கம் எண் :

திருமுறை]6. திருவாவடுதுறை43


61.

தருணேந்து சேகர னேயெனுந்
   தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருணேர்ந்த சிந்தை யவர்தொழப்
   புகழ்செல்வ மல்குபொற் கோயிலுள்
அருணேர்ந் தமர்திரு வாவடு
   துறையாண்ட ஆண்டகை யம்மானே
தெருணேர்ந்த சித்தம் வலியவா
   திலக நுதலி திறத்திலே.                       (4)
 

62.

திலக நுதல்உமை நங்கைக்கும்
   திருவா வடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க் கென்னையாட்
   கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்
அலதொன் றறிகின்றி லேமெனும்
   அணியும்வெண் ணிறஞ் செழுத்தலால்
வலதொன் றிலள்இதற் கென்செய்கேன்
   வயல்அந்தண் சாந்தையர் வேந்தனே.            (5)
 

பொருள்மேற்     பல  பெயர். சாந்தையூர் என்றதில், ‘‘ஊர்’’ என்றது.
அதன்கண்   வாழ்வாரை.   தருண  இந்து  சேகரன்  - இளமையான
சந்திரனை அணிந்த முடியை உடையவன்.

61.     பொருள் - மெய்ப்பொருள். நேர்ந்த -   தெளிந்த, அருள்
நேர்ந்து  -  அருளைத்  தர  இசைந்து  தெருள்  நேர்ந்த   சித்தம்-
இவளது  துன்பத்தைத்  தெளிய  உணர்ந்த மனம்.  ‘மனம்’  என்பதை,
‘உனது  மனம்’  என  உரைக்க.  வலியவா  - கடிதாய்  இருந்தாவாறு.
இதனை  இறுதியில் வைத்து, ‘வருந்தத்தக்கது’ என்னும்  சொல்லெச்சம்
வருவித்து  முடிக்க. இதனுள், ‘தருணேந்து சேகரனே’ என்பது ஒன்றும்
தலைவி கூற்று. ஏனைய, செவிலி கூற்று.

62. ‘குலம்’ என்பது ககரம் பெற்று, “குலகம்” என வந்தது; ‘கூட்டம்’
என்பது  பொருள்.  அம்மையை வேறு கூறியது, 'அவளோடு உடனாய்
நின்று  காட்சி வழங்கும் அவன்’ என்பது உணர்த்துதற்கு. கொடுத்து -
கொடுத்தமையால்,  “வெண்ணீறு”  என்றதற்கு,  ‘அதனைப்  பூசுதலும்’
எனவும்,   “அஞ்செழுத்து”   என்றதற்கு.  ‘அதனைச்  சொல்லுதலும்’
எனவும் உரைக்க. “வேந்தன்” என்றது, சிவபிரானை.