பக்கம் எண் :

44சேந்தனார் திருவிசைப்பா[ஒன்பதாந்


63.

வேந்தன் வளைத்தது மேருவில்;
   அரவுநாண் வெங்கணை செங்கண்மால்;
போந்த மதிலணி முப்புரம்
   பொடியாட வேதப்புர வித்தேர்ச்
சாந்தை முதல்அயன் சாரதி;
   கதிஅருள் என்னுமித் தையலை
ஆந்தண் திருவா வடுதுறை
   யான்செய்கை யார்அறி கிற்பரே.                (6)
 

64.

கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்
   கெடுத்தோடிக் கெட்டஅத் தேவர்கள்
சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள்
   என்சொல்லிச் சொல்லும்இத் தூமொழி
கற்போல் மனங்கனி வித்தஎம்
   கருணால யாவந்திடாய் என்றாற்
பெற்போ பெருந்திரு வாவடு
   துறையாளி பேசா தொழிவதே.                  (7)
 

63.    ‘நாண் அரவு’ எனவும் ‘அருள் கதி’ எனவும் மாறிக்கூட்டுக.
போந்த  மதில்  அணி  -  வானில்  திரிந்த மதில்களைக்  கொண்ட.‘
வேதப் புரவித் தேர்ச் சாந்தை முதல் வேந்தன்,   என முன்னே கூட்டி,
‘முப்புரம்  பொடியாட’  என்பதனை  அதன்பின்   வைத்து  உரைக்க.
‘அருள்  கதி’  என்றதற்கு,  ‘அவனது அருளே எனக்குப் புகல்’ எனப்
பொருள்  கூறுக.  ‘‘தையலை’’  என்றது  ‘‘செய்கை’’ என்னும் தொழிற்
பெயரோடு  முடியும்.  ஆம் - நீர் ‘அதனால் உண்டாகிய தண்மையை
உடைய திருவாவடுதுறை’ என்க. செய்கை - வருந்தச்  செய்தலை.‘யார்
அறிகிற்பர்’ என்றது, அறிந்து நீக்கவல்லார் யார் என்றதாம்.

64.   கிற்போம் - (வேள்வியை யாம் முடிக்க ) வல்லோம். எடுத்து-
அதனைத் தொடங்கி. ஓடிக்கெட்ட - (பின்பு அது மாட்டாமல்) தோற்று
ஓடி  அழிந்த.  சொல்-அத்தேவர்களது  புகழ்.  பயன் தருவது.  பயன்
எனப்பட்டது.  முன்னர்ப்  போந்த  சொற்குறிப்பால், ‘அவர்  புகழ்கள்
பயன்தருவனவாகா’   என்பது  பெறப்பட்டது.  ‘‘பாவிகாள்’’  என்றது,
அவர்  புகழ்களைப்  பயன்  தருவனவாகக்   கருதிச் சொல்லுவோரை.
எனச் சொல்லிச் சொல்லும்’’ என்றது, ‘என்று பலகாற் சொல்கின்ற’