பக்கம் எண் :

திருமுறை]6. திருவாவடுதுறை47


68.

பாலும் அமுதமும் தேனுமாய்
   ஆனந்தந் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம்
   புரகால காம புராந்தகன்
சேலுங் கயலுந் திளைக்கும்நீர்த்
   திருவா வடுதுறை வேந்தனோ
டாலு மதற்கே முதலுமாம்
   அறிந்தோம் அரிவைபொய் யாததே.             (11)
 

திருச்சிற்றம்பலம்
 


68.    ‘‘தேனுமாய்’’  என்ற  ஆக்கம்,  உவமை  குறித்து  நின்றது.
‘‘உள்ளே’’  என்றதன்பின்,  ‘நின்று’  என ஒரு சொல்  வருவிக்க. ‘என்
ஆருயிர்க்குப்   போகமாம்  புரன்’  என்க.  போகம்  -   சிவபோகம்;
அதனையுடைய  புரம்  சிவலோகம். காலன், காமன்,  புரம்  இவர்கட்கு
அந்தகன் என்க. அந்தகன் - முடிவைச் செய்பவன்.  ஆலும்  அதற்கே
முதலும்  -  விளையாடுகின்ற  அதற்கே  முந்துவாள். போலும்,  ஆம்
அசைநிலைகள், பொய்யாதது-மெய்யாகக் கூறிய  சொல், ‘‘பொய்யாதது’’
என்ற சொல் முதல் திருப்பாட்டிற் சென்று மண்டலித்தல் காண்க.


திருஞான சம்பந்தர் செய்யதிரு வடிபோற்றி
யருணாவுக் கரசர்பிரா னலர்கமல பதம்போற்றி
கருமாள வெமையாளுங் கண்ணுதலோன் வலிந்தாண்ட
பெருமாள்பூங் கழல்போற்றி பிறங்கியவன் பர்கள்போற்றி.          8

பேசுபுகழ் வாதவூர்ப் பிறந்துபெருந் துறைக்கடலுண்
டாசிலெழி றடித்தயர வஞ்செழுத்தா லதிர்த்தெழுந்து
தேசமலி தரப்பொதுவார் சிவபோக மிகவிளைவான்
வாசகமா மாணிக்க மழைபொழிமா முகில்போற்றி.                9
                                         _கோயிற் புராணம்.