பக்கம் எண் :

திருமுறை]7. திருவிடைக்கழி51


74.

கிளையிளஞ் சேய்அக் கிரிதனைக் கீண்ட
   ஆண்டகை கேடில்வேற் செல்வன்
வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை
   கார்நிற மால்திரு மருகன்
திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
முளைஇளங் களிறென் மொய்குழற் சிறுமிக்
   கருளுங்கொல் முருகவேள் பரிந்தே.              (6)
 

75.

பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ
   பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ
   சுந்தரத் தரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
   மையல்கொண் டையுறும் வகையே.               (7)
  

வனைக்     குறித்தது. ‘குறிக்கொளாதது என்பது குறைந்து    நின்றது.
மணம்  அணி  மறையோர்- மங்கல விழாக்களை அழகு  படுத்துகின்ற
அந்தணர்.  மறையோரை வையத்தாரினின்று வேறு பிரித்தது,  சிறப்புப்
பற்றி.    ‘வாழ   நின்ற’   என   இயையும்.   ‘திண்ணம்’   என்பது
இடைக்குறைந்து,  ‘‘திணம்’’  என  வந்தது,  ‘திண்மையாகிய   மாடம்’
என்க. கண மணி-கூட்டமாகிய இரத்தினங்களையுடைய.  இளங்கிளை -
தம்பி.

74.     ‘இளங்கிளை’ என்பதே ‘கிளைஇளையன்’ என மாறிநின்றது.
‘இளைய  பிள்ளை’  என்றவாறு. சேய் - முருகன். ‘ இளங்கிளையாகிய
முருகன்’  என்க.  கிரி,  கிரவுஞ்ச  மலை.  திளை -  பலரும் இன்பம்
துய்க்கின்ற. முளை இளங்களிறு-மிகவும் இளைய களிறு.  ‘‘முருகவேள்’’
என்றதை.   ‘‘களிறு’’   என்றதன்   பின்னும்   ‘‘பரிந்து’’   என்றதை,
‘‘சிறுமிக்கு’’ என்றதன் பின்னும் கூட்டுக. பரிந்து - அன்புகொண்டு

75.     பரிந்த - வீசுகின்ற. சுடர் - விளக்கு.  குழவி - கொழுந்து.
சிந்துரம்  -  செந்நிறப்  பொடி. மணி -மாணிக்கம்  சுந்தரத்து அரசு -
அழகின் தலைமை. முருகன் விற்படையும்