பக்கம் எண் :

52சேந்தனார் திருவிசைப்பா[ஒன்பதாந்


76.

வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை
   வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த
   பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென்
   துடியிடை மடல் தொடங்கினளே.                (8)
 

77.

தொடங்கினள் மடல் என் றணிமுடித் தொங்கற்
   புறஇத ழாகிலும் அருளான்
இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்
   மறத்தொழில்  வார்த்தையும்  உடையன்  
திடங்கொள்வை  திகர்வாழ் திருவிடைக் கழியில்

   திருக்குரா நீழற்கீழ் நின்ற
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்
   தறுமுகத் தமுதினை மருண்டே.                 (9)
 

உடையனாதலைக்     கருதி, ‘‘சிலைக்கை மைந்தன்’’ என்றான்.   அம்
சொல்  -  அழகிய  சொல்;  இஃது  அதனையுடையாள்மேல்  நின்றது.
‘ஐயுறும்’  என்றது  முற்று.  ‘வகையானே’  என  உருபு விரிக்க.  ‘அம்
சொலாள்,  மையல்  கொண்டு, மைந்தனை, சுந்தரத்து அரசாகிய   இது,
சுடரோ, பரிதியோ... ...என்ன வகைவகையாக ஐயுறும் ’ என்க.

76.  உழிஞை அமர். முற்றுகை இட்டுச் செய்யும் போர்.தாளாளன் -
வீரன்.  திகை  -  திசை.  தொகை  - எண் : அவை, நூறு,  ஆயிரம்,
நூறாயிரம்,  கோடி  முதலியவாம்.  நாமம்  -  பெயர்.   திருவடிக்கு -
திருவடியை  அடைதற்பொருட்டு  ;  என்றது ‘தன்னைப்  பணிகொள்ள
ஏற்றுக்     கொள்ளுதற்பொருட்டு’     என்றவாறு.    துடி    இடை
-உடுக்கைபோலும்    இடையை    உடையாள்.   ‘கடலன்ன   காமம்
உழப்பினும் பெண்டிர் மடல் ஏறுதல் இல்லை’ (குறள்-1137.)   ஆயினும்,
அவளது  பெருந்துயரைப்  புலப்படுத்த,  ‘மடல்  ஏறத்  தொடங்கினள்’
என்றாள். ‘மயல் தொடங்கினள்’ என்பதும் பாடம்.

77,     தொங்கல்  -  மாலை,  புறஇதழ்    சிறப்பில்லாததாகலின்,
‘அதனையேனும்  கொடுத்திலன்’  என்றாள்.   இடங்கொள் அக்குறத்தி
திறத்திலும் - தன்பால் இடங்கொண்டு இருக்கும்