திருச்சிற்றம்பலம்
வருவித்து, ‘இருசெவிக்கண்ணும்’ என ஈற்றில் தொக்கு நின்ற உருபும், உம்மையும் விரித்து, ‘ஒரு குழையே இருசெவிக் கண்ணும் உள்ளது’ எனப் பொருள் உரைத்து, ‘இருசெவிகளுள் ஒன்றிலே குழையுள்ளது’ என்பது அதனாற்போந்த பொருளாக உரைக்க. குழை உள்ளது வலச்செவியில்; இடச்செவியில் தோடு உளது. ’விமலம்-தூய்மை, பொறி-புள்ளி. வரி-கீற்று. திருவடிநிலை-பாதுகை; பின்னரும் பாதுகை கூறுவர். நீர்-நீர்மை 100. நீர் அணங்கு அசும்பு-நீரினது அழகிய ஊறுதலையுடைய ‘ஆதித்தேச்சரத்துத் திருவடி நிலை’ என இயையும், ‘திருவடிக்கும் ஆகாது திருவடிநிலைக்கே ஆகும்’ என்பார், ‘‘திருவடிநிலைமேல் மொழிந்த’’ என்றார் ஆரணம் மொழிந்தவாய்-வேதம் ஓதியவாய் ; இவர் தம்மை வேதம் ஓதியவராகப் பின்னரும் குறிக்கின்றார். அமுதம் ஊறிய-அமுதம் சுரந்தது போல இனிமை வாய்ந்த. ‘தமிழ்மாலைக்கண் உள்ள இருநான்கு இரண்டு’ என்க. ஏர் அணங்கு-எழுச்சி பொருந்திய அழகினை யுடைய. இருநான்கு இரண்டு-பத்து ; பத்துப் பாடல்கள். இருள்-அறியாமை. சிந்தையர்- உள்ளத்தையுடையவராவர். |