பக்கம் எண் :

66கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்



 

கமலமே வதனம் ; கமலமே நயனம் ;
   கனகமே திருவடி நிலை ; நீர்
அமலமே யாகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                 (9)
 

100.

நீரணங் கசும்பு கழனிசூழ் களந்தை
   நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து
நாரணன் பரவுந் திருவடி நிலைமேல்
   நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த
   அமுதம்ஊ றியதமிழ் மாலை
ஏரணங் கிருநான் கிரண்டிவை வல்லோர்
   இருள்கிழித் தெழுந்த சிந்தையரே.              (10)

 

திருச்சிற்றம்பலம்


வருவித்து,     ‘இருசெவிக்கண்ணும்’ என ஈற்றில் தொக்கு      நின்ற
உருபும்,  உம்மையும்  விரித்து,  ‘ஒரு குழையே இருசெவிக்  கண்ணும்
உள்ளது’   எனப்   பொருள்  உரைத்து,  ‘இருசெவிகளுள்  ஒன்றிலே
குழையுள்ளது’  என்பது  அதனாற்போந்த பொருளாக உரைக்க.  குழை
உள்ளது     வலச்செவியில்;     இடச்செவியில்    தோடு    உளது.
’விமலம்-தூய்மை,  பொறி-புள்ளி.  வரி-கீற்று.   திருவடிநிலை-பாதுகை;
பின்னரும் பாதுகை கூறுவர். நீர்-நீர்மை

100.     நீர் அணங்கு அசும்பு-நீரினது அழகிய  ஊறுதலையுடைய
‘ஆதித்தேச்சரத்துத்  திருவடி  நிலை’  என  இயையும், ‘திருவடிக்கும்
ஆகாது   திருவடிநிலைக்கே  ஆகும்’  என்பார்,  ‘‘திருவடிநிலைமேல்
மொழிந்த’’  என்றார்  ஆரணம்  மொழிந்தவாய்-வேதம்  ஓதியவாய் ;
இவர் தம்மை வேதம் ஓதியவராகப் பின்னரும் குறிக்கின்றார்.  அமுதம்
ஊறிய-அமுதம்  சுரந்தது போல இனிமை வாய்ந்த.  ‘தமிழ்மாலைக்கண்
உள்ள  இருநான்கு இரண்டு’ என்க. ஏர் அணங்கு-எழுச்சி பொருந்திய
அழகினை  யுடைய.  இருநான்கு  இரண்டு-பத்து ; பத்துப்  பாடல்கள்.
இருள்-அறியாமை. சிந்தையர்- உள்ளத்தையுடையவராவர்.