104. தெள்ளு - தெளிவாகிய ; வெண்மையான. ‘நீற்றவன்’ என வருதலேயன்றி, ‘நீறவன்’ என வருதலும் இலக்கணமேயாம். இரண்டாவதன் தொகையோடொப்பதாதலின். ‘‘கானக நாடனை நீயோ பெரும்’’ (புறம்-5.) ‘‘நாடன் என்கோ ஊரன் என்கோ’’ (- -49.) என்றாற்போல்வன பலவற்றுள்ளும் ‘நாடனை. நாடன்’ முதலாக வருவன பலவுங்காண்க. ‘நீறவன்’ என்பது, ‘சிவன்’ என்னும் அளவாய் நின்றது.‘‘என்’’ என்பது, ‘‘செவி’’ முதலிய பலவற்றோடும் சென்று இயையும். அவன் அறிவு நூல்-அவனை அறியும் அறிவைத் தரும் நூல். மெள்ள விளம்புதல்-செபித்தல். விமானம்-மூலத்தான மாளிகை. வெவ்வுயிர்க்கும்-வெப்பமாக மூச்செறியும், சோர்வுறுதலை இனிது விளக்க, மூக்கின் தொழிலாகிய உயிர்த்தலைக் கண்களுக்கு ஏற்றிக் கூறினார். ‘பொழிற்கண் என்பது, ’’பொழிற்கு’’ என உருபு மயக்கமாய் வந்தது. என்னும்-என்று நினைக்கும். 105. ‘தோழி, மணியம்பலவனைக் காண்பான் இருவர் கேழலும் புள்ளுமாகி நின்று மயங்கவும், யாம் மால் ஒழியோம் ; எம் உள்ளம் ஊழிதோறூழி அவனை உணர்ந்தமையால் அஃது இப்பிறப்பில் கசிந்து நெக்கு நைந்து கரைந்து உருகாநின்றது ; ஆயினும், யாம் அவனது துணைமலர்ச் சேவடி காண்பான் செய்த தொழில் என்’ எனக் கூட்டி உரைக்க. ‘‘தொழில்’’ என்றது, பணியை. ‘‘என்’’ என்றது, யாதும் இன்மையைக் குறித்து நின்றது. மனம் உருகினும் பணியின்றி |