பக்கம் எண் :

72கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்



 

கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மன்னவன் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தன்என் மனத்துள்வைத் தனனே.           (8)
 

109. 
 

யாதுநீ நினைவ தெவரையா முடைய
   தெவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
   பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
   கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்
மாதவன் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தன்என் மனம்புகுந் தானே.               (9)
 

உருபு.     மழலைச் சிலம்பு-மெல்லிய ஓசையையுடைய       சிலம்பு.
இன்னகையும் இறைவனுடையதே ; இதனைக் கங்கைக்கு  ஆக்குவாரும்
உளர்.  மழலைக்  கங்கை-இனிய  ஓசையையுடைய  கங்கை.  கொங்கு
இதழி-தேனை யுடைய கொன்றை மாலை. ‘கோங்கிதழி’ என்பது பாடம்
அன்று. வளர் இள மான்-வளர்தற்குரிய இளைய மான் ;  ‘மான் கன்று’
என்றபடி. கின்னரம், ஓர் நரம்புக் கருவி, முழவம்-மத்தளம்.

109.  ‘யாது  நீ  நினைவது  எவரை  யாம்  உடையது’  என்பதை
இறுதியிற்  கூட்டியுரைக்க.  ‘‘  நீ’’  என்றது,  தோழியை,  ‘நினைவது,
உடையது’  என்பன  தொழிற்பெயரும்  பண்புப்பெயருமாய்   நின்றன
உடையது.  தலைவனாகப்  பெற்றுடையது.  நொதுமலர் வரைவு பற்றித்
தோழி    கூறக்கேட்ட    தலைவி,   இவ்வாறு   கூறினாள்   என்க.
உயர்திணையைக்  குறிக்க,  ‘‘எவர்களை’’  என்றும்,  அஃறிணையைக்
குறிக்க,   ‘‘யாவையும்’’  என்றும்   கூறினாள்.  ‘‘அகலான்’’  என்றது
முற்றெச்சமாய்,  ‘புகுந்தான்’’ என்பதனோடு முடியும் கேதகை-தாழை ;
அதன்  பூவைக்  குறித்தது  ஆகுபெயர்.  குருகு-கொக்கு  ‘குருகென’
என்பதனை’  ‘வெருவு’ என்பதன் முன்னர்க் கூட்டுக. மாதவன்-பெரிய
தவக்கோலத்தை யுடையவன்.