திருச்சிற்றம்பலம்
110. அந்தியில் பிறை-மாலைக் காலத்தில் தோன்றுகின்ற சந்திரன். சிந்தையை விட்டு அவனிடத்தே அடங்குதலால், சிந்தை காணப்படாதாயிற்று. ‘ஏனைய கருவிகளையேயன்றி, எனப் பொருள் தருதலின், ‘‘சிந்தையும்’’ என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம். அலங்கல்-அசைவின்கண். கெந்தியா (கந்தியா)-மணம் வீசி, புண்டரிகம்-.தாமரை மலர்.‘‘கெந்தியா உகளும் கெண்டை புண்டரிகம் கிழிக்கும்’’ என்றாராயினும்‘புண்டரிகம் கிழிக்கும் கெண்டை கெந்தியா உகளும்’ என்பது கருத்தென்க. கெந்தித்தல். புண்டரிகத்தைக் கிழித்தலால் உண்டாயிற்று. வந்த நாள்-சென்று நான் அவனைக் கண்ட நாளில் (வேபட்ட என் மனநிலையை அவன் ஒருவனே அறிவான் என்க.) 111. கித்தி-விளையாட்டு.‘அரிவையர் கம்பலை செய்’ என இயையும். மத்தன்-உன்மத்தன் ; ‘ஊமத்த மலரைச் சூடியவன் எனலுமாம். பெரியவர்க்கு-பக்குவம் மிக்கோர்க்கு. ‘‘அகல் இரு விசும்பு’’ என்றது சிவலோகத்தை, ‘விசும்பின் கண்ணதாகிய முத்தி’ என்க. முத்தி தருவதனை, ‘‘முத்தி’’ என்றார். ‘திருவும்’ என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று திரு-திருமகள். அவள், துறக்கம் முதலிய செல்வத்தைத் தருபவள். எனவே, ‘இம்மை மறுமைப் பயன்களையும் பெறுவர்’ என்றதாம். |