பக்கம் எண் :

80கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்



 

மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்
   முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
எம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே
   எந்தையும் தாயும்ஆ யினையே.                (9)
 

121. 
 

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
   முகத்தலை யகத்தமர்ந் தினிய
பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன்
   பனிமலர்த் திருவடி யிணைமேல்
ஆலைஅம் பாகின் அனையசொற் கருவூர்
   அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவ ரெல்லாம்
   சிவபதம குறுகிநின் றாரே.                    (10)
 

திருச்சிற்றம்பலம்


முகத்தலை’’    என்றதில் தொக்குநின்ற ஆறாவது, ’யானையது  காடு’
என்பதுபோல.  வாழ்ச்சிக் கிழமைக்கண் வந்தது. ‘‘எம்பிரான்’’ என்றது,
‘இறைவன்’  என்னும்  அளவாய் நின்றது. ‘‘மீண்டு’’ என்றது, ‘மற்றும்’
என்னும் பொருள் பட வந்தது.

121.     மூலம்-முதல். இறைவன் மூலமும், முடிவுமாதல் உலகிற்கு.
அவற்றைத்  தனக்கு  இலனாதலின்,  ‘‘முடிவிலா  முதலாய்’’ என்றார்.
இங்கு  ‘‘முதல்’’  என்றது,  ‘பொருள்’ என்னும் பொருட்டு. ஆலையம்
பாகு-கரும்பு    ஆலையிடத்து    உள்ள   பாகு.   அம்,  சாரியை.
‘சொல்லையுடைய  கருவூர்’  என்க. ‘கருவூரது மாலை’ என இயையும்.
சீலமா-ஒழுக்கமாக (கடமையாக)க் கொண்டு, ‘நிற்பார்’ என்பது, துணிவு
பற்றி,‘‘ நின்றார்’’ என இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.


ஒன்றியசீ ரிரவிகுல முவந்தருளி யுலகுய்யத்
துன்றுபுகழ்த் திருநீற்றுச் சோழனென முடிசூடி
மன்றினடந் தொழுதெல்லை வளர்கனக மயமாக்கி
வென்றிபுனை யநபாயன் விளங்கியபூங் கழல்போற்றி.  

                                      -கோயிற்புராணம்.