பக்கம் எண் :

திருமுறை]14. திருப்பூவணம்97


145.

பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்
   பன்னெடுங் காலம்நிற் காண்பான்
ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த
   எளிமையை என்றும்நான் மறக்கேன்
தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்
   தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்
பூம்பணைச்சோலை ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே.                (2)
 

146.

கரைகடல் ஒலியின் தமருகத் தரையிற்
   கையினிற் கட்டிய கயிற்றால்
இருதலை ஒருநா இயங்கவந் தொருநாள்
   இருந்திடாய் எங்கள்கண் முகப்பே
 

145.     ‘‘முத  றேவர்’’  என்பதல்லது.  ‘முதற்  றேவர்’  என்பது
பாடமாகாது.  ஏம்பலித்து-வருந்தி,  தேம்  புனற்  பொய்கை-தேனொடு
கூடிய  நீரையுடைய  பொய்கையின்  நீரை.  பொய்கை,   ஆகுபெயர்.
தேறல்-தேன்.   ‘‘ஒழுகும்’’   என்றது,   ‘பணை’  சோலை’  என்னும்
இரண்டனையும்  சிறப்பித்தது.  பணை-வயல்,  ‘பணை  வீதி, சோலை
வீதி’ எனத் தனித்தனி முடிக்க.

146.     கரை-ஒலிக்கின்ற.  கடல்  ஒலியின்-கடல்  ஒலி  போன்ற
ஒலியினையுடைய.  ‘‘தமருகத்து  அரையின்’’ என்பது முதல், ‘‘இயங்க’’
என்பதுகாறும்  உள்ள பகுதியால் இறைவன் தனது  தமருகத்தினின்றும்
ஒலியை எழுப்பும் முறை விளக்கப்பட்டது. தமருகம்- உடுக்கை.  ‘அதன்
அரைக்கும்  உனது கைக்குமாகக் கட்டப்பட்டுள்ள கயிற்றினால்  அதன்
இருபக்கத்தும்    ஒருநாவே   சென்று   தாக்கி   ஒலியை    எழுப்ப,
அந்நிலையோடே   எங்கள்  கண்களின்  முன்னே  ஒருநாள்   வந்து
இருந்தருள்’  என்றவாறு.  விரி-விரிவு  ; முதனிலைத் தொழிற்  பெயர்.
‘‘விழவு’’   என்றது,   அதிற்கூடும்   மக்கட்   கூட்டத்தினை. பாடல்
பாடுவோர்  மக்கட்  கூட்டத்தின் நெருக்கத்திடையே செல்லாது பின்பு
செல்லுதலின்,  ‘‘விழவின்பின்  செல்வோர்  பாடல்’’ என்றார். ‘விழவிற்
பின்செல்வோர்   பாடல்’  எனப்  பாடம்  ஓதி  விழாவில்  ‘நின்பின்
செல்வோரது   பாடல்   ;   என்று   உரைத்தலும்   ஆம்.   பாடல்
வேட்கையின்-பாடல்மேல்  எழுந்த வேட்கையினால், ‘வீழ்ந்த புரிசடை,
போது  அவிழ்ந்த  புரிசடை’  என்க.  ‘நின்புரிசடை’  என  உரைக்க.
வீழ்ந்த-அவிழ்ந்த, அடியாரது