பக்கம் எண் :

106கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்


157.

அனலமே ! புனலே ! அனிலமே ! புவனி
   அம்பரா! அம்பரத் தளிக்கும்
கனகமே !வெள்ளிக் குன்றமே ! என்றன்
   களைகணே ! களைகண்மற் றில்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்
   சைவனே ! சாட்டியக் குடியார்க்
கினியதீங் கனியாய் ஒழிவற நிறைந்தேழ்
   இருக்கையில் இருந்தவா றியம்பே.               (6)

  

158.

செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற
   திசைமுகன் மால்முதற் கூட்டத்
தன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே !
   அத்தனே ! பித்தனே னுடைய
சம்புவே ! அணுவே ! தாணுவே ! சிவனே !
   சங்கரா ! சாட்டியக் குடியார்க்
கின்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
   இருக்கையில் இருந்தவா றியம்பே                (7)
 

157.     ‘அனல்’  என்பது  ஈற்றில்  அம்முப்   பெற்று   நின்றது.
அனிலம்-காற்று    ஏனையவற்றோடொப்ப,    ‘‘புவனி’’   என்பதிலும்
விளியுருபாகிய  ஏகாரம்  விரிக்க.  புவனி-பூமி.   அம்பரா-ஆகாயமாய்
உள்ளவனே  ;  இங்கு  இவ்வாறு  உயர்திணையாக   விளித்தமையால்,
‘‘அனலம்’’  முதலியவற்றையும்  ஆகுபெயராகக்  கொள்க.  அம்பரத்து
அளிக்கும்     கனகமே-(நல்வினை     செய்தோர்க்கு)    விண்ணில்
கொடுக்கப்படுகின்ற            பொன்னுலகமே.          வெள்ளிக்
குன்றமே-சிவனடியார்கட்கு   அளிக்கப்படுகின்ற   கைலை   மலையே.
களைகண்-துணை.   சைவன்-சிவம்(மங்கலம்)  உடையவன்.   ‘சைவன்’
என்றது  சிவபெருமானைக்  குறிக்குமிடத்து,  ‘சிவம்’   என்னும் சொல்
பண்பினை உணர்த்தி நிற்கும். அவன் அடியார்களைக்  குறிக்குமிடத்து
அச்சொல் அப்பண்பினையுடைய முதற் பொருளைக் குறித்துநிற்கும்.

158.     ‘பித்தனேனை’ என்னும் இரண்டனுருபு  தொகுத்தலாயிற்று.
சம்பு-இன்பத்தைத்    தோற்றுவிப்பவன்.     தாணு-அசைவில்லாதவன்.
சங்கரன்-இன்பத்தைச் செய்பவன்.