யிருக்க. ‘கோயிலாக’ என, ஆக்கம் வருவிக்க. ‘‘நெஞ்சு’’ என்றதனை, ‘‘என்’’ என்றதனோடு கூட்டுக. மறக்கேன்-மறவேன் ; இவ்வாறு முன்னும் வந்தது. ‘‘நெடும்புருவத்து’’ என்பதனை முன்னே கூட்டி, ‘மின்னும் இளமயிலும் அனையார்’ என உரைக்க. விலங்கல்- மலை, செய், உவம உருபு. ‘நாடக சாலைக்கண்’ என உருபு விரிக்க. 170. மங்குல் சூழ் போதின்-மேகத்தால் மறைக்கப்பட்ட ஞாயிற்றைப்போல. ‘பாலின் நெய்போல’ என்ற உவமை போல, இஃது இறைவன் எங்கும் இருந்தும் விளங்காது நிற்றற்குக் கூறப்பட்ட உவமை. ‘‘ஒழிவற நிறைந்து’’ என்பதை முதலிற் கூட்டுக. அங்கு-அவ்விடத்தில்; நெஞ்சில், அழல் சுடராம் அவர்க்கு-எரிகின்ற விளக்குப்போல ஒளியுடையராய் இருக்கின்ற அன்பர்க்கு. வேனல் அலர் கதிர் அனையர்-வேனிற் காலத்து விரிந்து விளங்குகின்ற ஞாயிறு போலப் பேரொளி வீசிநிற்பவர். திருநீறு அழிபொசி வனப்பின்-திருநீறு அழிந்து குழைகின்ற அழகோடு. புனல் துளும்பு சடை மொழுப்பர்-நீர் ததும்புகின்ற சடைமுடியை உடையவர். சடையிலுள்ள நீர் துளும்புதலால் திருமேனியிற் பூசியுள்ள நீறு அழிந்து குழைகின்ற அழகையுடையர்’ என்பதனை இவ்வாறு கூறினார். ‘‘வாழியர்’’ என்றதனை வியங்கோளாகவும், ஓகாரத்தைச் சிறப்பாகவும் வைத்து ‘‘வாழியரோ’’ என்றதனை இறுதியிற் கூட்டி, ‘ஒளிப்பவரும், அனையவரும், இனியவரும் ஆகிய |