பக்கம் எண் :

திருமுறை]19. கோயில்131



 

நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாடோறும்
ஆடகத்தான் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே. (8)
 

193.

உருவத் தெரியுருவாய் ஊழிதோ றெத்தனையும்
பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த
இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்
தரவிக்கும் அம்பலமே ஆடரங்க மாயிற்றே.           (9)
 

194.

சேடர் உறைதில்லைச் சிற்றம் பலத்தான்றன்
ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து பூந்துருத்திக்
காடன் தமிழ்மாலை பத்துங் கருத்தறிந்து

பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே.          (10)
 

திருச்சிற்றம்பலம்
 


நின்    அரங்கு ஆடகத்தால்    அமைந்த அம்பலம்’ எனக் கொண்டு
கூட்டி  உரைக்க. ‘பாடகம், நூபுரம்,  சிலம்பு’ என்பன, மகளிரது காலில்
அணியும்   அணிவகைகள்.     பேர்ந்து-அசைந்து.  சூடகம்-கைவளை.
நாடகம்-கதை   தழுவிய   கூத்து.   ‘அது   போலும்  கூத்து’  என்க.
அஃதாவது,  கதைப்  பொருளைக்  கைகாட்டி   ஆடும்  கூத்து.  இன்
கூத்து-இனிய கூத்து. நவிற்றுதல்-செய்தல். மேய்ந்து-வேயப்பட்டு.

193.     உருவத்து-அழகையுடைய.   ‘எரியுருவாய் ஆடு அரங்கம்’
எனவும்,   ‘ஏத்த  ஆடு  அரங்கம்’ எனவும்    இயையும்.  ‘அரங்கம்
மாளிகை   சூழ்ந்து   அரவிக்கும்   அம்பலமே   ஆயிற்று’   என்க.
இரவி-சூரியன். அரவிக்கும் -ஒலியை உண்டாக்குகின்ற.

194.   சேடர்-தொண்டர். ‘பூந்துருத்திக் காடன் சிற்றம்பலத்தான்றன்
ஆடல்   அதிசயத்தை   அறிந்து  கருத்து  அறிந்து    பாடும் தமிழ்
மாலையாகிய  இவை  பத்தும் வல்லார், பற்றிய நிலை பற்றுவர்’ எனக்
கொண்டு   கூட்டுக.  கருத்து  பாடக்  கொள்ளும் பொருள்.   பற்றும்
நிலை-அடையத்தக்க நிலை; வீடு. பற்றுவர்-அடைவர்.