கலந்து. ‘மேற்கொள்ள விளையாடும்’ என இயையும். ‘மேல் கொள்ள விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே’ என்றாராயினும். ‘மேல்கொள்ள விளையாடி ஆடு அரங்கு அம்பலமே’ என்பது கருத்தென்க. 190. ‘‘நீ’’ என்பதொழிய, ‘‘புகலோகம்’’ என்பது முதல், ’’புண்ணியங்கள்’’ என்பது காறும் உள்ள அனைத்தையும் முதலிற் கூட்டுக. புக - புகுவதற்கு. லோகம் உண்டு என்று - வேறு உலகம் உண்டு என்று நினைத்து. ‘‘புவலோகம்’’ என்றது, ‘மேலுலகம்’ என்னும் அளவாய் நின்றது. புவலோக நெறி படைத்த-மேலுலகத்தை அடைவிக்கும் நெறியானே எய்திய. ‘புண்ணியங்களால்’ என உருபு விரித்து. அதனை, ‘‘சூழ’’ என்பதனோடு முடிக்க. புண்ணியங்களை எய்தினோர் அடியவர்கள். அகலோகம்-இவ்வுலகம் இத்திருப்பாட்டில் உயிரெதுகை வந்தது. 191. களக மணி - நீல மணி. மாடம் - மேல்நிலம். சூளிகை - மேல்மாடத்தின் முகப்பு ‘மாடத்தைச் சூளிகை சூழ்ந்த மாளிகை’ என்க. அளக நுதல் - கூந்தலை உடைய நெற்றி. ‘‘மதி’’ என்றது. பிறையை. ‘மதிநுதலாராகிய ஆயிழையார்’ என்க. போற்றிசைப்ப (உன்னைத்) துதிக்க, தெளி - விளக்கம். 192. ‘பாடகமும் நூபுரமும் பல் சிலம்பும் பேர்ந்தொலிப்ப, நாள்தோறும் நாடகத்தின் கூத்தை நவிற்றும் அவலாகிய சூடகக்கை நல்லார் தொழுது ஏத்தத் தொல்லுலகில் ஆடு |