பக்கம் எண் :

138கண்டராதித்தர் திருவிசைப்பா[ஒன்பதாந்


ஆராஇன்சொற் கண்டரா தித்தன்
   அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமை யோடும்
  பேரின்பம் எய்துவரே.                         (10)
 

திருச்சிற்றம்பலம்


மாலை’     என்க. ஆரா இன்சொல்-தெவிட்டாத இனிமையையுடைய
சொல்லையுடைய.    பேரா    உலகு-   சென்றடைந்தோர்   நீங்காது
நிலைபெறும் உலகம்; வீட்டுலகம்.


தனிப்புதல்வன் றனையணைத்துத் தகவுச்சி மோந்து சடங்
கனைத்துமடை வினிலியற்றி யருமறைநூ லவைகொடுத்து
மனத்துணையாந் திருநாம மருவுநெறி யுபதேசித்
தினிச்செயவேண் டுவதென்கொ லெனமொழிந்தா னெழின்
                                              [முனியன்   2.

இந்தவகை சிவனருளா லிரவியெதிர் மணியுமிழ
வந்தவன லெனவிளங்கு மழமுனிவ னடிவணங்கித்
தந்திரமுன் புகலுமருந் தவத்தொகையிற் றலையான
வந்தமின்மா தவமடியேற் கருளுகென வுரைசெய்தான்.             3

தவமெவையு முணர்ந்தமுனி தனயன்முக மிகநோக்கிப்
புவனமலி போகங்கள் பொருந்துமருந் தவம்புரிந்தாற்
சிவகதியு மிதுவன்று சிவார்ச்சனமார்ச் சனமாகிற்
பவமகலும் பரபோகம் பெறலாகு மெனப்பகர்ந்தான்.              4

சொன்னமொழி கொண்டிறைவன் றோன்றிமகிழ்ந் துளதானம்
பன்னுகென மழமுனிக்குப் பார் முழுதும் பரப்பிரம
சன்னிதியன் றெனக்காண்ட றவக்குறைகா ணென்றாலு
மன்னிடமாய் நிகழுமிட முளதென்றான் மாமுனிவன்.              5

பாருயிர்கட் குபகரித்துப் பரப்பினடுப் படுவதொரு
மேருகிரி யும்புடைசூழ் வெற்புமவற் றிடைநாடு
மாருயிர்கள் பயனருந்து மமருலகா மெனக்கழித்தான்
சீருலவு நாறுவளர் செறுவெனலாஞ் செறிமையுற.                 6
 
                                            -கோயிற்புராணம்.