பக்கம் எண் :

146திருவாலியமுதனார் திருவிசைப்பா[ஒன்பதாந்


புலம்பி வானவர் தான வர்புகழ்ந்
   தேத்த ஆடுபொற் கூத்த னார்கழற்
சிலம்பு கிங்கிணிஎன் சிந்தை
  
யுள்ளிடங் கொண்டனவே.                      (2)
 

217.

குருண்ட வார்குழற் கோதை மார்குயில்
   போல்மி ழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லைதன்னுள் திரு
   மல்குசிற் றம்பலவன்
மருண்டு மாலை யான்ம கள்தொழ
   ஆடுங் கூத்தன் மணிபு ரைதரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை
   யுள்ளிடங் கொண்டனவே.                      (3)
 

218.

போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன்
   மகள்உமை யச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ் தட
   மல்குசிற் றம்பலவன்
சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து
   வீக்கும் பொன்னூல் தன்னினொடு
தாழ்ந்த கச்சதன்றே தமி
   யேனைத் தளர்வித்ததே.                       (4)
 


அலம்பி-கிண்டி.      புலம்பி-முறையிட்டு்.   தானவர்-அசுரர்.  பொற்
கூத்து   -   பொன்போலச்  சிறந்த  நடனம்,   சிலம்பு-  ஒலிக்கின்ற.
இதனுள்ளும், ‘‘அணி, சிந்தை’’ என்பன கூன்.

217.     குருண்ட - சுருண்ட. ‘‘மிழற்றிய’’ என்னும்  இறந்த காலம்,
‘அத்தன்மையைப் பெற்ற ’ என்னும் பொருட்டு. திரண்ட -  நெருங்கிய.
திருமல்கு  -  அழகு  நிறைந்த;  இது  சிற்றம்பலத்தைச்  சிறப்பித்தது.
மருண்டு-வியந்து. மணி-மாணிக்கம். வான் குறங்கு-சிறந்த துடை.

218,     போழ்ந்து - உரித்து, ‘உமையது   அச்சத்தைப்  பின்னர்க்
கண்டவன்’  என்க. இனி, ‘‘கண்டவன்’’ என்றதற்கு’  ‘உண்டாக்கினவன்’
எனப்  பொருள்  கொண்டு,  ‘உமைக்கு  என  நான்காவது விரித்தலும்
ஆம்.  தாழ்ந்த புனல் - ஆழ்ந்தநீர். தொடுத்து  வீக்கும் - வளைத்துக்
கட்டிய. பொன் நூல்-அழகிய