பக்கம் எண் :

திருமுறை]22. கோயில்147


219.

பந்த பாச மெலாம்அ றப்பசு
   பாச நீக்கிய பன்மு னிவரோ
டந்தணர் வணங்கும் அணி
   யார்தில்லை யம்பலவன்
செந்த ழல்புரை மேனியுந் திகழுந்
   திருவயிறும் வயிற்றினுள்
உந்தி வான்சுழிஎன் உள்ளத்
   துள்ளிடங் கொண்டனவே.                     (5)
 

220.

குதிரை மாவொடு தேர்ப லகுவிந்
   தீண்டுதில்லையுட் கொம்ப னாரொடு
மதுர வாய்மொழி யார்மகிழ்ந்
   தேத்துசிற் றம்பலவன்
அதிர வார்கழல் வீசிநின்றழ
   காநடம் பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம்என் னுள்ளத்
   துள்ளிடங் கொண்டனவே.                     (6)
 


பூணநூல்.    ‘‘பொன்னூல் தன்னினொடு’’ என்பதை  ‘‘சிற்றம்பலவன்’’
என்றதன்   பின்னர்க்   கூட்டுக.   தாழ்ந்த  கச்சு-பொருந்திய  கச்சு.
இப்பாடலில் சீர்கள் சிறிது வேறுபட்டு வந்தன.

219.     ‘‘பந்த   பாசம்’’   என்றது,   செயற்கையாகிய   மாயை
கன்மங்களையும்,     ‘‘பசு    பாசம்’’    என்றது    இயற்கையாகிய
ஆணவத்தையும்  குறித்தன.  அற-அறுமாறு.  ‘‘பசு  பாசம்’’  என்னும்
ஆறாவதன்  தொகை  வடநூல் முடிபு. ‘‘சுழி’’ என்பதில் எண்ணும்மை
தொகுக்கப்பட்டது. இதனுள், ‘‘அணி, உள்ளத்து’’ என்பன கூன்.

220.     மா-யானை.       ஈண்டு-நெருங்குகின்ற.      கொம்பு
அன்னார்-பூங்கொம்புபோலும் ஆடல் மகளிர். மதுர வாய் மொழியார்-
இனிய   இசைப்பாட்டைப்  பாடுகின்றவர்.  அதிர-ஒலிக்க.  ‘வார்கழல்
அதிர’  என  மாற்றி,  வீசுதலுக்கு,  ‘கால்’என்னும்  செயப்படுபொருள்
வருவிக்க.   ‘‘கூத்தன்’’  என்றது  அவனது  திருமேனியைக்  குறித்த
ஆகுபெயர்.  கச்சு,  மேற்கூறப்பட்டமையின்,  உதரபந்தனம் அதனின்
வேறென்க.  உதர  பந்தனம்  -  வயிற்றின்மேல்  உள்ள கட்டு, கச்சு,
அரையில் கட்டப்படுவது. ‘‘கொண்டன’’ என்ற பன்மையால் இது  பல