பக்கம் எண் :

152திருவாலியமுதனார் திருவிசைப்பா[ஒன்பதாந்


செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள்
   திருநடம் வகையாலே
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர்க்கணை
   படுந்தொறும் அலந்தேனே.                    (2)

 

228.

அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே!
   அணிதில்லை நகராளீ!
சிலந்தி யைஅர சாள்கஎன் றருள்செய்த
   தேவதே வீசனே
உலர்ந்த மார்க்கண்டிக் காகிஅக் காலனை
   உயிர்செக உதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை மேல்ஒற்ற
   வந்தருள் செய்யாயே.                         (3)
 


நெஞ்சைப்   பிளந்தன’ என்றாள். நெக்கு வீழ்தரு   நெஞ்சு - முன்பே
உடைந்து  அழிந்த  மனம்.  ‘‘பாய்தல்’’ என்றது,  ‘போழ்தல்’ என்னும்
பொருட்டாய்    நின்றது.    நிறை    -     நெஞ்சினைத்   தன்வழி
நிறுத்துந்தன்மை.  ‘‘இருப்பேனை’’ என்றதை,  ‘இருப்பேன்மேல்’ எனத்
திரித்து.  அதனை,  ‘‘படுந்தொறும்’’என்பதனோடு  முடிக்க.  இவ்வாறு
திரியாமலே,  ‘‘பக்கம்  ஓட்டந்த’’  என்பதனை,   ‘அணுகிய’  என்னும்
பொருட்டாக்கி,  அதனோடு  முடித்தலும்  ஆம்.   மூன்றாம்  அடியை
முதலடியின்  பின்னர்க்  கூட்டி  உரைக்க.   பக்கம்  ஓட்டந்த-அருகில்
ஓட்டந்த - அருகில் ஓடிவந்த, அலந்தேன் - வருந்தினேன்.

228.     சிவபெருமான்,  சிலந்தியை  அரசாளச்   செய்தமையைக்
கோச்செங்கட்சோழ  நாயனார்  புராணத்துக்  காண்க. ‘தேவ தேவாகிய
ஈசனே’  என்க.  தேவ தே - தேவர்க்குத் தேவன்.  ‘‘தேவ தேவீசனே’’
என்ற இருசீர்களும் வேறுபட வந்தன. ‘‘உலந்த’’  என்பதற்கு, வாழ்நாள்
உலந்த’  என  உரைக்க.  ‘‘உலத்தல் -முடிதல், ‘‘மார்க்கண்டி’’ என்பது,
‘மிருகண்டு  முனிவர் மகன்’ என்னும் பொருளது.  ஆகி - துணையாகி.
‘‘அக்  காலனை,  என்னும்  சுட்டு, ‘அந்நாளில் வந்த காலனை, எனப்
பொருள்  தந்தது.  செக-அழிக்கக்கருதி,  உதைகொண்ட -  உதைத்தற்
றொழிலை   மேற்கொண்ட.   ‘உதைகொண்ட   பாதங்கள்,   மலர்ந்த
பாதங்கள்’  எனத்  தனித்தனி  முடியும்.  ‘பாதங்களால்  வந்து’  என
மூன்றாவது விரித்து முடிக்க. வனம் - அழகு.