பக்கம் எண் :

திருமுறை]24. கோயில்159


237.

அன்ன நடையார் அமுத மொழியார்
   அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும் கலந்த
   சிற்றம் பலந்தன்னுட்
பொன்னும் மணியும் நிரந்த தலத்துப்
   புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள் காண
   விகிர்தன் ஆடுமே.                           (2)
 

238.

இளமென் முலையார் எழில்மைந் தரொடும்
   ஏரார் அமளிமேல்
திளையும் மாடத் திருவார் தில்லைச்
   சிற்றம் பலந்தன்னுள்
 


237.    அன்ன நடையார் அமுத  மொழியார் அவர்கள்-அன்னம்
போலும்   நடையை   உடையவரும்,   அமுதம்போலும்   மொழியை
உடையவரும்   ஆகிய  அவர்கள்;   மகளிர்.  மகளிர்  அழகும், பிற
நலங்களும்  உடையராய்  இருத்தல்   இல்லத்திற்கேயன்றி,  ஊர்க்கும்,
நாட்டிற்கும்   சிறப்பைத்   தருவது    என்க.  தென்னன்-பாண்டியன்,
இவ்வொருமைப்  பெயர்  பாண்டியரது  குடியின்மேல்  நின்று  அவர்
அனைவரையும்  குறிப்பதாயிற்று.   தமிழ் நாட்டு மூவேந்தருள் சங்கம்
நிறுவித்    தமிழை    வளர்த்தவர்    பாண்டியராதலின்,    தமிழை
அவர்க்குரியதாகக் கூறினார்.‘‘உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்
தமிழ்’’
 என்றார்  திருக்கோவை  யாரினும் (20). இனி, ‘நற்றமிழ்’ என
வருதலல்லது,  ‘நன்றமிழ்’  என  வருதல் வழக்கின்கண்  இன்மையின்,
‘தென்நன்தமிழ்’  எனல்  ஆகாமை  அறிக.  ‘‘இசை’’  எனப் பின்னர்
வருகின்றமையின்,   ‘‘தமிழ்’’   என்றது,   இசைத்    தமிழையாயிற்று.
இயற்றமிழையும்,  இசைத்தமிழையும்  கூறவே,   இனம்  பற்றி நாடகத்
தமிழும்    கொள்ளப்படுவதாம்.    ஆகவே,   ‘முத்தமிழும்   கலந்த
சிற்றம்பலம்’  என்றதாயிற்று.  கலந்த-பொருந்திய.  நிரந்த தலம்-பரந்து
பொருந்திய  நிலம்.  பியற்கு-தோளில் ‘தலத்து, இட்டு, காண விகிர்தன்
ஆடும்’ என்க.

238.     ‘திளைக்கும்’   என்பது,   ‘திளையும்’  எனச்   சாரியை
தொகுக்கப்பட்டு     நின்றது.     திளைத்தல்-இன்பத்தில்    மூழ்கல்.
பொன்மலை சிற்றம்பலத்தின் வடிவிற்கும், வயிர மலை இறைவ