பக்கம் எண் :

160திருவாலியமுதனார் திருவிசைப்பா[ஒன்பதாந்


வளர்பொன் மலையுள் வயிர மலைபோல்
   வலக்கை கவித்துநின்
றளவில் பெருமை அமரர் போற்ற
   அழகன் ஆடுமே.                         (3)
 

239.

சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும்
   சாதி பலவுங்கொண்
டுந்தி யிழியும் நிவவின் கரைமேல்
   உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப் பதியுள்

   சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம்
   நாதன் ஆடுமே.                          (4)
 

240.

ஓமப் புகையும் அகிலின் புகையும்
   உயர்ந்து முகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர்மல்கு
   சிற்றம் பலந்தன்னுள் 
 


னுக்கும்      உவமை. திருநீற்றுப்   பூச்சினால்  இறைவன்  திருமேனி
வயிரமலைபோல் காணப்படுவதாயிற்று. ‘கவித்தல்’ என்றது,  அபயமாகக்
காட்டுதலை.

239. தழைப்    பீலி-தழைபோன்ற மயில் தோகை. சாதி  ஒருவகை
மரம்;   இதன்   காய்  சிறந்ததொன்றாகக்  கொள்ளப்படுதல்   அறிக.
கொண்டு-அகப்படக்  கொண்டு, உந்தி இழியும்-தள்ளி ஓடுகின்ற.  நிவா,
ஓர்   யாறு.   ‘கரைமேல்   விளங்கும்   தில்லை’   என    உரைக்க.
‘தில்லையாகிய   தெய்வப்பதி’   என்றவாறு.  ‘‘சிந்திப்பரிய’’   என்றது.
‘சிந்தனையுள் அடங்காத பெருமையை உடைய ’ என்றபடி.

240. ‘‘தீ     மெய்த் தொழில்’’ என்றதை. ‘மெய்த் தீத்தொழில் என
மாற்றி,  ‘மெய்த்  தொழில்,  தீத்தொழில்’  எனத்  தனித்தனி  முடிக்க.
மெய்ம்மை - என்றும் ஒழியாமை. தீத்தொழில்-தீயை ஓம்பும்   தொழில்;
வேள்வி  வேட்டல்.  வாமம்-இடப்பக்கம்.  ‘எடுத்த  எழில்  ஆர் வாம
பாதம்’ என மாற்றிக்