பக்கம் எண் :

திருமுறை]26. கோயில்171


258.

ஆவியின் பரம்என்றன் ஆதரவும்
   அருவினை யேனைவிட் டம்ம அம்ம
பாவிவன் மனம்இது பைய வேபோய்ப்
   பனிமதிச் சடையரன் பாலதாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும்
   நெஞ்சமும் தஞ்சமி லாமை யாலே
ஆவியின் வருத்தமி தார்அறிவார்
   அம்பலத் தருநடம் ஆடு வானே.               (2)
 

259.

அம்பலத் தருநட மாடவேயும்
   யாதுகொல் விளைவதென் றஞ்சி நெஞ்சம்
உம்பர்கள் வன்பழி யாளர் முன்னே
   ஊட்டினர் நஞ்சைஎன் றேயும் உய்யேன்
வன்பல படையுடைப் பூதஞ் சூழ
   வானவர் கணங்களை மாற்றி யாங்கே
என்பெரும் பயலைமை தீரும் வண்ணம்
   எழுந்தரு ளாய்எங்கள் வீதி யூடே.              (3)
 


258.     இரக்கத்தின்கண் வந்த ‘அம்ம’ என்பது அடுக்கி நின்றது.
பாவி  மனம்-கொடுஞ்  செயலை உடையதாகிய மனம். ‘இதுவும் என்ற
எச்ச  உம்மை  விரிக்க.  ஆல்,  ஓ  அசை  நிலைகள்.  நீவி-நீக்கம்;
தனிமை;  மேகலை என்று கொண்டு, ‘நீவியின் நெகிழ்ச்சியும்’  என்பது
பாடம்  என்பாரும்  உளர்.  நெகிழ்ச்சி-தளர்ச்சி; மெலிவு. ‘‘நெஞ்சமும்
தஞ்சம்  இலாமையாலே’’ என்றதனை, ‘‘அரன் பாலதாலோ’’ என்றதன்
பின்னர்க்  கூட்டுக.  ‘நீவி முதலியனவாகிய இவ் ஆவியின்  வருத்தம்’
எனச்  சுட்டு  வருவித்து  உரைக்க.  ‘நடமாடுவானே  அறியும்’  என
ஒருசொல்  வருவித்து  முடிக்க.  அல்லாக்கால் ‘‘அரன்’’ என்றதனோடு
இயையுமாறில்லை.     ‘‘போய்’’     என்பது       முன்னிலைக்கண்
செல்லாதாகலின்,  ‘சடைய  நின்பாலதாலோ’  எனப்  பாடம்  ஓதலும்
ஆகாது.   இத்திருப்பாட்டிலும்,  வருந்திருப்பாட்டிலும்,   ‘அருள்நடம்’
எனப் பாடம் ஓதுவாரும் உளர்.

259.     ‘‘ஆடவேயும்’‘  என்றாரேனும்,  ‘ஆடுகின்றாய்  என்றும்,
ஊட்டினர்  என்றும்  கேட்டு  ‘யாது விளைவதுகொல் என்று  நெஞ்சம்
அஞ்சி உய்யேனாயினேன்’ என உரைத்தல் கருத்து என்க.  ஏகாரங்கள்
இசைநிறை. ‘வன்பழியாளராகிய