பக்கம் எண் :

172புருடோத்தம நம்பி திருவிசைப்பா[ஒன்பதாந்


260.

எழுந்தருளாய் எங்கள் வீதி யூடே
   ஏதமில் முனிவரோ டெழுந்த ஞானக்
கொழுந்தது வாகிய கூத்த னேநின்
   குழையணி காதினின் மாத்தி ரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் மூன்றும்
   செங்கனி வாயும்என் சிந்தை வௌவ
அழுந்தும்என் ஆருயிர்க் கென்செய் கேனோ
   அரும்புனல் அலமரும் சடையினானே.            (4)
 

261.

அரும்புனல் அலமரும் சடையினானை
   அமரர்கள் அடிபணிந் தரற்ற அந்நாள்
பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை
   பேசவும் நையும்என் பேதை நெஞ்சம்
 


உம்பர்’  என்க. ‘உனக்கு ஊட்டினர்’ எனச் சொல்லெச்சம்   வருவிக்க.
‘‘உய்யேன்’’  என்றது  ‘இறந்துபடும்  நிலையில்  உள்ளேன்’ என்றபடி.
வன்பழியாளாராகிய  கொடுமை  மிகுதி  பற்றி ‘ வானவர் கணங்களை
மாற்றுதல்’  ஒன்றையே  எடுத்துக் கூறினாளாயினும், ‘ஆடுதலை விட்டு
எழுந்தருளாய்’ என்றலும் கருத்தாம். என்னை ? ‘ஒழியாது  ஆடுதலால்
இறைவற்குத் திருமேனி நேரம் என்பது கருதியும்  வருந்தினாளாதலின்’.
பயலைமை  -  பசலைத்  தன்மை.  ‘எழுந்தருளின்  இதுவும்   தீரும்’
என்றவாறு.

260.     ‘‘எழுந்தருளாய் எங்கள் வீதியூடே’’ என்பதனை இறுதியிற்
கூட்டுக.   ஏதம்   -  குற்றம்.  முனிவர்,  பதஞ்சலி,  வியாக்கிரபாதர்
முதலியோர்.   ‘தில்லைவாழந்தணர்’   எனலும்  ஆம்.  ‘‘கொழுந்தது’’
என்பதில்   அது,   பகுதிப்பொருள்  விகுதி.  கொழுந்து,   முடிநிலை.
’மாத்திரை’   என்பதும்  ஓர்  காதணியே.  வௌவ-வௌவினமையால்
அழுந்தும்-துன்பத்தில்    ஆழ்கின்ற.    உயிர்க்கு-உயிர்    நிற்றற்கு.
அலமரும்-அலைகின்ற.  ‘நீ  எங்கள் வீதியூடே எழுந்தருளினால் என்
உயிர் நிற்கும்’ என்றவாறு.

261. ’’சடையினானை’’என்றது, ‘சடையை உடையவனாகிய நின்னை’
என,  முன்னிலைக்கண்  படர்க்கை  வந்த  வழுவமைதி.  சிலை-வில்.
வார்த்தை-  (வீரச்)  செய்தி.  ‘‘பேசவும்’’  என்ற  உம்மை,  ‘பேசுதல்
ஒன்றையே   பிறர்   செய்யவும்,   எனப்பொருள்   தந்து   நின்றது,
நையும்-(அதனைக் கேட்ட அளவிலே)