நெகிழ்ந்துருகும். கருந் தடமலர்-கரிய நீர்ப் பூ; நீலோற் பலம். கண்ட-கண்டத்தை உடையவனே. வண் தார்-வளப்பமான மாலையை அணிந்த. ‘தார்’ என்பது இங்குப் பொதுமையில் நின்றது காரிகையார்-பெண்கள். ‘அவர்கள் முன்பு’ என்றது, ‘அவர்கள் நகைக்கும்படி’ என்றதாம். பெண்மை - பெண் தன்மை; நாணம், நசை - விருப்பம். ‘நசையினாலே தோற்றேன்’ என முன்னர்க் கூட்டுக. 262, ’’தேவதேவை’’ என்றதும், முன் திருப்பாட்டில், ‘‘சடையினானை’’ என்றதுபோன்ற வழுவமைதி, தேறிய அந்தணர்-தெளிந்த அந்தணர்கள்; என்றது, ‘ஞானத்திற் சிறந்தஅந்தணர்’ என்றவாறு. எல்லை-இடம்; என்றது சிற்றம் பலத்தை. ‘‘எல்லையது’’ என்றதில் உள்ள அது, பகுதிப் பொருள் விகுதி. ‘எல்லையதன்கண்’ என ஏழனுருபு விரிக்க. ஆகிய-பொருந்திய. காவல் கொண்டு-காத்து. பல்லைப் பொருந்திய பசுந்தலை, இடுகாட்டுள் நரி முதலியவற்றால் இழக்கப்பட்டுக் கிடப்பன பல் தோன்றக் கிடத்தலை, ‘‘பல்லை ஆர்’’ என்றார், ‘பாதம் அவற்றோடு இடறுதலால் அம்மலரடி நோவ’ என்க. அல்லினில்-இருளில். ஆடில்-ஆடினால், ஆருயிர் காவல்-ஆருயிரை யாங்கள் காத்தல். அரிது-இயலாது. ‘ஆதலின், இனி அதனை ஒழிக’ என்பது குறிப்பெச்சம். |