பக்கம் எண் :

திருமுறை]26. கோயில்173


கருந்தட மலர்புரை கண்ட வண்டார்
   காரிகை யார்முன்பென் பெண்மை தோற்றேன்
திருந்திய மலரடி நசையி னாலே
   தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவே.          (5)
 

262.

தில்லையம் பலத்தெங்கள் தேவ தேவைத்
   தேறிய அந்தணர் சிந்தை செய்யும்
எல்லிய தாகிய எழில்கொள் சோதி
   என்னுயிர் காவல்கொண் டிருந்த எந்தாய்;
பல்லையார் பசுந்தலை யோடிடறிப்
   பாதமென் மலரடி நோவ நீபோய்
அல்லினில் அருநட மாடில் எங்கள்
   ஆருயிர் காவல் இங் கரிது தானே.              (6)
 


நெகிழ்ந்துருகும்.     கருந்  தடமலர்-கரிய  நீர்ப் பூ;  நீலோற்  பலம்.
கண்ட-கண்டத்தை  உடையவனே.  வண் தார்-வளப்பமான மாலையை
அணிந்த.    ‘தார்’    என்பது   இங்குப்   பொதுமையில்   நின்றது
காரிகையார்-பெண்கள்.   ‘அவர்கள்   முன்பு’   என்றது,   ‘அவர்கள்
நகைக்கும்படி’  என்றதாம். பெண்மை - பெண் தன்மை; நாணம்,  நசை
- விருப்பம். ‘நசையினாலே தோற்றேன்’ என முன்னர்க் கூட்டுக.

262,     ’’தேவதேவை’’    என்றதும்,    முன்    திருப்பாட்டில்,
‘‘சடையினானை’’     என்றதுபோன்ற     வழுவமைதி,      தேறிய
அந்தணர்-தெளிந்த     அந்தணர்கள்;     என்றது,      ‘ஞானத்திற்
சிறந்தஅந்தணர்’ என்றவாறு. எல்லை-இடம்; என்றது  சிற்றம் பலத்தை.
‘‘எல்லையது’’   என்றதில்  உள்ள  அது,  பகுதிப்  பொருள்  விகுதி.
‘எல்லையதன்கண்’ என ஏழனுருபு விரிக்க. ஆகிய-பொருந்திய.  காவல்
கொண்டு-காத்து.  பல்லைப்  பொருந்திய  பசுந்தலை, இடுகாட்டுள் நரி
முதலியவற்றால்  இழக்கப்பட்டுக்  கிடப்பன பல் தோன்றக்  கிடத்தலை,
‘‘பல்லை  ஆர்’’ என்றார், ‘பாதம் அவற்றோடு இடறுதலால் அம்மலரடி
நோவ’   என்க.  அல்லினில்-இருளில்.  ஆடில்-ஆடினால்,   ஆருயிர்
காவல்-ஆருயிரை  யாங்கள் காத்தல். அரிது-இயலாது. ‘ஆதலின், இனி
அதனை ஒழிக’ என்பது குறிப்பெச்சம்.