பக்கம் எண் :

178புருடோத்தம நம்பி திருவிசைப்பா[ஒன்பதாந்


270.

ஒட்டா வகைஅவுணர் முப்புரங்கள் ஓர் அம்பால்
பட்டாங் கழல்விழுங்க எய்துகந்த பண்பினார்
சிட்டார் மறைஓவாத் தில்லைச்சிற் றம்பலவர்
கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே.     (3)
 

271.

ஆரே இவைபடுவார்? ஐயம் கொளவந்து
போரேடி என்று புருவம் இடுகின்றார்

தேரார் விழவோவாத் தில்லைச்சிற் றம்பலவர்

தீராநோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே.         (4)
 


270. ஒட்டா வகை அவுணர்-பொருந்தாத வகைமையை (பகைமைக்
குணத்தை)  உடைய  அசுரர்.  ‘ஓர்  அம்பால் எய்து’ என இயையும்,
‘அழல்   பட்டு   விழுங்க’   என   மாற்றுக.  ஆங்கு,  அசைநிலை.
உகந்த-தேவர்களை   விரும்புகின்ற.   ‘சிட்டம்’   என்பதன்  ஈற்றில்
அம்முக்குறைந்து   நின்றது.   சிட்டம்-உயர்வு   :   கொட்டு  ஆம்
நடம்-மத்தளம்   முதலியவற்றின்   முழக்கம்   பொருந்திய  நடனம்.
ஆட-ஆடுதலால்.    ‘ஆடி’    எனப்   பாடம்   ஓதுதல்  சிறக்கும்.
‘கொடியோரை அழித்து நல்லோரை விரும்பிக் காக்கும் பண்புடையார்,
என் கோல்வளைகளைக் கொள்வார் ; இது தக்கதோ’ என்றபடி.

271.      ஆரே-நற்பண்புடையார்      எவர்தாம்.       இவை
படுவார்-இக்குணங்கள்   தோன்ற  நிற்பார்.  செய்யுளாதலின்  சுட்டுப்
பெயர்  முன்வந்தது. எனவே, ‘‘இவை’’ என்றது. பிச்சையேற்பார்போல
வந்து     பெண்டிரை      மயங்கச்செய்வனவாய்        பின்வருங்
குணங்களையாயிற்று.  ஐயம்-பிச்சை.  ‘‘போர்’’  என்றதை,  ‘‘புருவம்’’
என்பதன்     பின்னர்க்கூட்டுக.    ஏடி-பெண்பால்     விளிப்பெயர்.
‘புருவத்தால்’   என   உருபு  விரிக்க.  புருவத்தால் போரிடுதலாவது.
புருவத்தை   நெறித்துக்  காதற்குறிப்புணர்த்துதல்.  இதனை,  ‘‘போர்’’
என்றாள்;    நோய்    மாத்திரமே    செய்துபோதலின்.   தீராநோய்
செய்வார்-கெடுத்  தொழியும்  இயல்பினர். ஓக்கின்றார்-அவரோடு ஒரு
தன்மையராய்க் காணப்படுகின்றார். ‘‘ஒக்கின்றார்’’என்றதனால் ‘இவரது
இயல்பு அதுவன்று’ என்பது பெறப்பட்டது.