பக்கம் எண் :

194சேந்தனார் திருப்பல்லாண்டு[ஒன்பதாந்


ஊரும் உலகும் கழற உழறி
   உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
   பல்லாண்டு கூறுதுமே.                        (7)
 

296.

சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங்
   கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று
   புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறிதந்து
   வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே.                        (8)
 


எனக்  காரணம் வருவித்து, ‘‘பெற்றது’’ என்றதற்கு,  ‘பெற்றபயன் என
உரைக்க. அங்ஙனம் உரையாவிடில், ‘‘ஆரும்பெறாத அறிவு’ என்றதன்
பொருளே     பொருளாய்ச்    சிறப்பின்றாம்.     பயன்,சிவானந்தம்.
ஆர்-அவ்வறிவைப்  பெறாத  எவர்.  ‘அத்தகைய  பயனை  நீவிரும்
பெற்றீராதலின். நாம் அனைவரும் கூடிப் பல்லாண்டு கூறுவோம்’ என
இயைபுபடுத்துரைக்க.  ஊர்-வாழும் ஊர். கழற-எடுத்துச் சொல்லும்படி;
இதற்கும்   செயப்படுபொருள்  இனி  வருகின்ற  ‘‘ஆள்’’  என்பதே.
அதனால்,   ‘‘உமை   மணவாளனுக்கு  ஆள்’’  என்பதை, ‘‘உலகில்’’
என்றதன்  பின்னே  வைத்து உரைக்க. உழறி-அவன்  புகழைப்பிதற்றி.
‘பிதற்றி’  என்றார்.  முற்ற  அறியாது அறிந்தவாறே கூறலின். இதனை,
‘‘நாம்’’ என்பதன் பின்னர்க் கூட்டுக. ஆள்-நாம் ஆளான தன்மையை,
‘‘கழற’’   எனவும்,  ‘‘அறியும்  பரிசு’’  எனவும்  வேறு  வேறு முடிபு
கொள்ளுதலால்,  ‘‘பாரும்’’  என்றது,  கூறியது கூறல் ஆகாமை அறிக.
பரிசு-தன்மை. ‘பரிசினால்’ என மூன்றாவது விரிக்க.

296. சேல், கயல் என்பன மீன்வகை. ‘சேலும் கயலும் போல’ என
உவம  உருபு  விரிக்க.  திளைக்கும்-பிறழ்கின்ற. ‘‘குங்குமம்’’ என்றது.
குங்குமங்  கூடிய சாந்தினை. ‘குங்குமம் போலும் பொடி மார்பின்கண்
இலங்கும்’ என்க. அணி-அழகு. சொற்கிடக்கை முறை இவ்வாறாயினும்,
‘மார்பிற்  பொடி,  கொங்கையிற்  குங்குமம்போல  இலங்கும்’ என்றல்
கருத்தென்க. இதனால் இறைவன் மார்பில் உள்ள திருநீறு,