இவர் பாடியருளிய திருவிசைப்பாப் பதிகங்கள் ஒன்றேயாகும். இப்பதிகம் கோயில் என்னும் சிதம்பரத்தைப்பற்றியது. காலம்:- இவர் முதற்குலோத்துங்கன் கி.பி. 1070 - 1120 காலத்தவராக அல்லது பிற்பட்ட காலத்தவராக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். திருவிசைப்பா ஆசிரியர்களின் துதி நின்மலனின் அருளாலே நீத்துலக வாழ்க்கையினைச் சொன்மயனைச் சிவனவனைத் துதித்தினிய சொலினால்எம் புன்மையினைப் போக்கியமா ளிகைத்தேவன் முதற்புலவர் நன்மலர்த்தாள் இணைபணிந்து மனத்தகத்து நாட்டுவமே. -அருணகிரி புராணம். செந்தமிழார் மாளிகைத்தே வன்முதலார் சேவடியும் வந்தனைசெய் துய்ந்தேம் மகிழ்ந்து. -பரமத திமிர பானு. |