|
சேரமான்; மதிமலிபுரிசை
திருமுகங்கூறி-மதிமலிபுரிசை என்று அடி எடுத்துப் பாடி இந்த வோலையை; கிடைத்துக் காண்க
எனக் கூறி-பெற்றுக் காண்பானாக என்று திருவாய் மலர்ந்தருளி; அன்பு உருக்கரித்த இன்பு
இசைப்பாணன்-அன்பு தானே ஒருவடிவாகப் பெற்ற இனிய இசையினையுடைய பாணன்; நிதிபெறக்
கொடுக்கென- பொருளைப் பெறும்படி வழங்குவானாக என்று; உறவிடுத்து அருளிய-பொருந்தச்
செலுத்தியருளிய; மாதவர் வழுத்தும் கூடற்கு இறைவன்-பெரிய தவத்தையுடையோர் வணங்குகின்ற
நான்மாடக் கூடலுக்கு இறைவனாகிய சோமசுந்தரக் கடவுளினுடைய; இருசரண் பெருகுநர்போல-இரண்டாகிய
திருவடிகளையும் பெற்ற அடியார் போல; பெருமதி நீடுவர்-மிகுந்த மெய்யறிவின்கண் நெடிது
நிலைப்பர் காண் என்க.
(வி-ம்.) பரிபுரம்-சிலம்பு.
குடக்கோச்சேரன்-குடநாட்டுக் கோவாகிய சேரமாங் மதிமலிபுரிசை- மதிமலிபுரிசை என்னும்
தொடக்கத்தையுடைய செய்யுள்; அன்பே ஒரு வடிவங் கொண்டாற் போன்ற பாணன் என்க. பெருமதி-மெய்யறிவு.
மெய்யறிவின்கண் நீடுவர் என்றது மெய்யாய இன்பத்தின்கண் நிலைத்து வாழ்வர் என்றவாறு.
இனி இதனைச் சிறுமதிநுதலே! பொன்மலை முதலியவற்றை ஒப்பதாகிய கல்வியையுடைய மாக்கள்
இறைவன் சரண் பெருகுநர் போலப் பெருமதியின்கண் நீடுவார்காண் என வினைமுடிவு செய்க.
எனவே யானும் அக்கல்வியைப் பெறுதற்குச் சிறிதுகாலம் நும்மைப் பிரிந்து போவேன்.
நீ இக்கருத்தினைத் தலைவிக்குக் கூறி யான் வருமளவும் ஆற்றுவித்திடுவாயாக என்பது குறிப்பெச்சம்.
மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-பிரிவுணர்தல்
|