|
|
|
தென்புலக்
கோமகன் றீத்தெறு தண்டமும்
நரகொடு துறக்கத் துழல்வரு பீழையும்
நீளா திம்பரின் முடித்து |
|
65
|
|
மீளாக் காட்சி தருதியின் றெனவே. |
(உரை)
1
- 3: பாய்............................திரை
(இ-ள்) பாய்திரை
உடுத்த ஞாலம்-பரவிய அலைகளையுடைய கடலினை ஆடையாக உடுத்த உலகத்தில் வாழ்வோர்;
முடிவு என்ன-இஃது இவ்வூழியின் முடிவுக் காலம் என்று அஞ்சாநிற்ப; முடங்கு உளைமுகத்து பல்தோள்
அவுணனொடு-வளைந்த பிடரிமயிரையுடைய சிங்கமுகத்தினையும் பலவாகிய தோள்களையும் உடைய
அசுரனோடே: செங்களம் மிடை உடு உதிரப் பொருது-குருதியால் சிவந்த போர்க்களத்தில்
நெருங்கிய மீன்கள் உதிரும்படி போர் செய்து என்க.
(வி-ம்.) பாய்-பரந்த;
இயங்குகின்ற எனினுமாம். பாய்திரை அன்மொழித்தொகை. கடல் என்க. ஞாலம்-உலகம்.
ஆகுபெயர். உயிர் என்க. முடிவு-ஊழி முடிவு. முடங்குளை: அன்மொழித் தொகை. சிங்கம் என்க.
பஃறோள் அவுணன் என்றது சிங்கமுகாசுரனை. உடு-விண்மீன்.
4-11:
ஞாட்பினுள்.................................மாவின்
(இ-ள்) ஞாட்பினுள்
மறைந்து-அவ்வசுரன் ஞெரேலென அப் போர்க் களத்தினின்றும் மறைந்து போய்; நடுவுறு வரத்தால்-செம்மை
மிக்க வரம் பெற்றுடைமையால்; வடவைநெடு நாக்கின் கிளைகள் விரிந்தாற்போல்; செந்துகிர்
படரும் திரைக்கடல் புக்கு-சிவந்த பவளக் கொடிகள் படருதற்குக் காரணமான அலைகளையுடைய
கடலின் கண்ணே புகுந்து; அகல் திரைப்பரப்பில்-அகன்ற அலைகளையுடைய அக்கடற் பரப்பில்;
கிடந்து எரிவடவையின் தளிர்முகம் ஈன்று- கிடந்து எரியா நின்ற வடவைத்தீயின் கொழுந்து
போலத் தன்னிடத்திலே தளிர்விட்டு; திரை எறிமலைகளின் கவடுபல போக்கி-அக்கடலின்
அலைகளால் மோதப்படுகின்ற மலைகளைப் போலக் கிளைகள் பலவற்றையும் வளரச் செய்து;
கல்செறி பாசியில் சினைக்குழை பொதுளி-அம் மலைகளிடத்தே செறிந்த பாசிகளைப் போன்று
அக் கிளைகள் தோறும் தழைகள்
|